வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, December 30, 2019

மாத வீட்டு வாடகையாக ரூ.15 லட்சம் செலவு செய்த இந்திய தூதர்.. அரண்டு போன வெளியுறவுத்துறை.. அதிரடி

ஆஸ்திரியாவிற்கான இந்திய தூதர் ரேணு பால், வீட்டு மாத வாடகைக்காக 15 லட்சத்தை எடுத்து நிதி முறைகேடுகள் செய்ததால் அவரை திரும்ப அழைத்துள்ளது. 1988 பேட்ச் இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான ரேணு பால் ஆஸ்திரியாவில் தூதராக பணியாற்றி வருகிறார். அவரது பதவி காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. 


இந்நிலையில் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சி.வி.சி) உத்தரவின்படி, வெளிவிவகார அமைச்சகத்தினால் நடத்தப்பட்ட விசாரணையின்படி, இந்திய தூதர் ரேணு பால் "அமைச்சகத்தின் அனுமதியின்றி தான் தங்கிய வீட்டுக்காக கோடி ரூபாய்க்கு பெரும் செலவு செய்திருப்பது தெரிய வந்தது. வெளியுறவுத்துறையின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி தலைமையிலான குழு செப்டம்பர் மாதம் வியன்னாவுக்கு சென்று விசாரணை நடத்தியது. அதன் பிறகு மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு அளித்த பரிந்துரையில் இந்திய தூதர் ரேணு பால் நிதிமுறைகேடுகள் செய்தது. விதிகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருந்தது. 
இதையடுத்து பல்வேறு மோசடி புகாரையடுத்து ஆஸ்திரியா இந்தியா தூதர் ரேணுபாலுக்கு தூதர் அந்தஸ்தை ரத்து செய்த இந்திய வெளியுறவுத்துறை அவரை உடனே திரும்ப அழைத்துள்ளது.

நிர்வாகிகளிடம் விசாரித்த ஸ்டாலின்

கட்சிக்காரர்களின் வீடுகளில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கோலங்கள் போடப்படுகிறதா என திமுக மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் அழைத்து திமுக தலைவர் ஸ்டாலின் விசாரித்துள்ளார்.



CAA-வுக்கு எதிராக கட்சிக்காரர்கள் வீடுகளில் கோலங்கள் போடப்படுகிறதா? நிர்வாகிகளிடம் விசாரித்த ஸ்டாலின்

திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் கோபாலபுரம் இல்லம் உள்ளிட்ட இடங்களில் கோலம் போடப்பட்டும் CAA-விற்கு எதிராக கண்டனங்கள் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட கழக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்

உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், அங்கு பீர் பார்ட்டி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். 
அத்தகைய பீரில் நிறைய பிராண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும். இத்தகைய பீரை அளவாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 
அதுமட்டுமின்றி, இந்த பீரைப் பற்றிய பல உண்மைகளை, ஆய்வுகள் பல கூறுகின்றன. அவற்றில் பீரை அளவாக அருந்தி வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை 45% வருவதை தவிர்க்கலாம் என்றும், பீர் எலும்புகளை பலப்படுத்தும் என்பன குறிப்பிடத்தக்கவை. மேலும் இதுப்போன்று அந்த பீரைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.



பீர் பிராண்ட்டுகள் உலகில் சுமார் 400 வகையான பீர்கள் உள்ளன. இந்த 400 வகையான பீர்களின் சுவையையும் ருசிக்க வேண்டுமெனில், பெல்ஜியம் சென்றால் கிடைக்கும். ஏனெனில் இங்கு அனைத்து வகையான பீர்களும் கிடைக்கும்.

பீர் ஃபோபியா உங்களுக்கு பீர் ஃபோபியா பற்றி தெரியுமா? ஆம், பீர் குடிக்கும் போது, முழுவதும் குடித்தப் பின்னர், அதன் பாட்டிலை காலியாக பார்க்கவே முடியாது. அதனால் பாட்டில் காலியாக காலியாக அடுத்தடுத்த பீரை குடிக்க வேண்டுமென்று தோன்றும். என்ன உங்களுக்கு இந்த பீர் ஃபோபியா இருக்கா?


உண்மையான பீர் பீரைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளில் ஒன்று தான், அசல் பீரானது சிச்சா என்று அழைக்கப்படும் நொதிக்கப்பட்ட நீரில் இருந்து செய்யப்பட்டது என்பதாகும்.




சளிக்கு சிறந்தது சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது 1 டம்ளர் பீர் குடித்தால், பீரில் உள்ள எத்தனால் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். அதிலும் இந்த பீரை சாப்பிட்டால், 60 சதவீத கிருமிகள் உடலில் இருந்து அழிக்கப்படும்.


இதய நோய்


இதய நோய் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை சரிசெய்ய நினைத்தால், ஒரு டம்ளர் பீர் சாப்பிட்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம். அதிலும் ஒரு பாட்டில் பீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பிளாஸ்மாவை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.

பீரில் உள்ள மற்றொரு உண்மை என்னவென்றால் பீரை குடித்து வந்தால், பீரானது அழகாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்க வைக்கும்



அளவாக பீரை பருகி வந்தால், எலும்புகள் நன்கு வலிமையடைவதோடு, எலும்புகளில் அடர்த்தியானது பாதுகாக்கப்படும். இதனால் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்

எப்போதும் ஸ்மார்ட்டாக இருக்க விரும்பினால், ஒரு டம்ளர் பீர் குடித்தால் ஆகலாம். ஏனெனில் பீர் குடித்தால், புரிந்து கொள்ளும் திறனானது மேம்படுத்தப்பட்டு, ஸ்மார்ட்டான நபராக மாற்றும்.





உடலில போதிய ஆற்றல் இல்லாவிட்டால், அப்போது ஒரு டம்ளர் பீர் குடித்தால், உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதோடு, ஆற்றலும் அதிகரித்து, சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.

விலை உயர்ந்த பீர்


மிகவும் விலை உயர்ந்த பீரை குடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் லண்டனுக்கு செல்ல வேண்டும். ஆம், அங்கு தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பீரான 'vieille bon secours' உள்ளது. அதுவும் லண்டனிலேயே ஒரே ஒரே ஒரு பாரில் மட்டும் தான் விற்கப்படுகிறது.

Sunday, December 15, 2019

கச்சத்தீவு அருகே பரபரப்பு!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் பகுதியில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று காலை மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக இவர்கள் மீன்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டனர்.


இந்த சூழலில் கச்சதீவு பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்கள் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனால் தமிழக மீனவர்கள் அச்சத்துடன் இருந்தனர்.

இன்று அதிகாலை கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது குறுக்கிட்ட இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி படகை நிறுத்துமாறு கூறினர்.

இதையடுத்து 50க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்கள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். இந்தப் பகுதிக்கு மீண்டும் வந்தால் கைது செய்துவிடுவோம் என்று எச்சரித்து விடுத்து விரட்டி அடித்தனர்.

மும்முரமாக வேலை செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்!



நாளை கடைசி நாள்

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில், வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. அதுவும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தற்போது தேர்தல் நடைபெறுகிறது.


இதன்மூலம் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான கடைசி நாள் நாளை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 6 நாட்களில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் பகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் போன்றவற்றை அறிவித்துள்ளன. இதனால் வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 17ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் வரும் 19ஆம் தேதி ஆகும். அதன்பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Wednesday, December 11, 2019

ஜியோ மீண்டும் ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம், தனது பயனர்களுக்கு இலவச வாய்ஸ் கால் சேவைக்கான அறிவிப்பை இன்னும் அறிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக தற்பொழுது ஜியோ நிறுவனம் மீண்டும் தனது ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் தனது பயனர்களுக்குச் சேவையை வழங்க இந்த திட்டங்களை மீண்டும் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.


1ஜிபி டேட்டா கிடைக்கும் புதிய திட்டம் :

ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருக்கும் அனைத்து புதிய திட்டங்களில் குறைந்த டேட்டா சேவையே தினமும் 1.5ஜிபி டேட்டா தான் வழங்கப்படுகிறது. அதைவிடக் குறைவான டேட்டா சேவையைத் தேவைப்படும் பயனர்களுக்கு என்று தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும்படி இந்த ரூ.149 திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.


ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் : 

ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, தினமும் 100 எஸ்.எஸ்.எஸ், ஜியோ - ஜியோ அழைப்புகள் இலவசம் மற்றும் 300 FUP லிமிட் பொருந்திய மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கான நிமிடங்கள் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. FUP லிமிட் முடிந்த பின், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்று வசூலிக்கப்படும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம் :

ஜியோவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம், ஜீடோவின் மற்ற திட்டங்களைப் போல் இல்லாமல் சற்று வேறுபாட்டுடன் இருக்கிறது, மற்ற திட்டங்களில் கிடைக்கும் தினசரி டேட்டா பலன் இந்த ரூ.98 திட்டத்தில் கிடைப்பதில்லை. இதற்குப் பதிலாக அதன் வேலிடிட்டி காலத்தில் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் ஒட்டுமொத்தமாக டேட்டா மற்றும் எஸ்.எஸ்.எஸ் வழங்கப்பட்டுள்ளது.


ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன் :

ஜியோவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு ஒட்டுமொத்தமாக 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் ஜியோ - ஜியோ அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் மற்ற நெட்வொர்க்கு அழைப்புகளுக்கான IUC டாக் டைம் திட்டங்களைப் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த திட்டம் மற்ற திட்டத்தை போல் 28 நாட்கள் வேலிடிட்டி இல்லாமல், வெறும் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • The Rs 10 plan offers 124 IUC minutes to Non-Jio numbers and 1GB additional data.
  • The Rs 20 plan offers 249 IUC minutes and 2GB data.
  • The Rs 50 plan offers 656 IUC minutes and 5GB data
  • The Rs 100 plan offers 1,362 IUC minutes and 10GB data.

இன்று மாலை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி48!

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.
புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் ரிசாட்-2பி ஆர்1 (RISAT - 2BR1) செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி48 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று மாலை 4.40 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
628 கிலோ எடைகொண்ட ரிசாட் 2பிஆர்1 செயற்கைக்கோளில் உள்ள நவீன ரேடார் மூலம் துல்லியமாக பூமியைப் படம்பிடிக்க முடியும் என்பதால் பாதுகாப்புத் துறைக்கு வலுசேர்ப்பதாக இருக்கும். அதன் வாயிலாக கிடைக்கும் தரவுகள் வேளாண்மை, பேரிடர் மேலாண்மை போன்ற பயன்பாட்டிற்கும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும்.
2009ம் ஆண்டில் ரிசாட்-2, 2012ல் ரிசாட்-1, கடந்த மே மாதம் ரிசாட் 2பி ஆகியவை அனுப்பப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.
ரிசாட் 2 பிஆர்1 செயற்கைக்கோளுடன் வணிக ரீதியில் அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள், இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோள்கள் என 10 செயற்கை கோள்கள் செலுத்தப்பட உள்ளன.
ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, திருப்பதியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், இது பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டின் 50வது திட்டம் என்று தெரிவித்தார்.
இது விண்ணில் இருந்து பூமியை ஆய்வு செய்ய இஸ்ரேல் மாணவர்களுக்கு பெரிதும் உதவும். கல்வி சார்ந்த செயற்கைக்கோளான இதில் கேமரா, ரேடியோ டிராஸ்பாண்டர் உள்ளிட்டவை இருக்கின்றன.

பிரதமர் மோடி, சீன அதிபர் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக தமிழக அரசு உயரதிகாரிகள் சீனா செல்லவுள்ளனர்.

மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12ம் தேதிகளில் தலைவர்கள் இருவரும் சந்தித்து பேசினர். அதன் தொடர்ச்சியாக சீன அதிகாரிகள் தமிழகம் வந்தனர். இதையடுத்து தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறையிலுள்ள செலவீன பிரிவு செயலாளர்  சித்திக், சிப்காட் மேலாண் இயக்குனர் குமரகுருபரன் உள்ளிட்ட 4 பேர் வரும் 15ந் தேதி முதல் 21ஆம் தேதி வரை பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் பயணம் செய்யவுள்ளனர். 


அப்போது கிரேட்வால் மோட்டார்ஸ், ஆம்பெரக்ஸ் டெக்னாலஜி நிறுவனங்களை பார்வையிடும் அவர்கள், தமிழகத்தில் அந்நிறுவனங்கள் தொழில் தொடங்துவது குறித்து பேச்சு நடத்தவுள்ளனர்.

திமுக உட்பட 10க்கு மேற்பட்டோர் வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

தமிழகத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதே சமயம் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் வேறு தேதிகளில் நடக்கும்.


உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக உட்பட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள், நபர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை இன்று நடக்கிறது. தமிழகம் உள்ளாட்சி தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட அமைப்புகள், நபர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.

அளவில் பெரியதாக இருக்கிறது வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்! பொதுமக்கள் வாங்கத் தயக்கம்

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. இதேபோல, தஞ்சாவூரிலும் வெங்காயம் கிலோவுக்கு ரூ. 200 என விற்றது. வெங்காயப் பற்றாக்குறையாலும், விலை அதிகரிப்பாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே, துருக்கி, எகிப்து நாடுகளில் இருந்து மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்தது. எகிப்தில் இருந்து வந்த வெங்காயம் திருச்சிக்கு திங்கள்கிழமை வந்தது. இதைத்தொடா்ந்து, தஞ்சாவூருக்கு எகிப்து நாட்டு வெங்காயம் செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.
தஞ்சாவூருக்கு எகிப்து நாட்டு வெங்காயம் செவ்வாய்க்கிழமை வந்தாலும், பொதுமக்கள் வாங்குவதற்குத் தயங்கினா்.
தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் வெங்காய மண்டி நடத்தி வரும் எஸ்.கே. சிதம்பரத்துக்கு 2 டன்கள் வெங்காயம் வந்தது. இந்த வெங்காயம் பீட்ரூட் போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், அதை வாங்குவதற்குப் பொதுமக்கள் தயங்குகின்றனா். ஆனால், உணவகம் நடத்தி வருபவா்கள் வாங்கிச் செல்வதால், பெரும்பாலும் விற்பனையாகிவிட்டது.

Monday, December 2, 2019

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த இருநாட்களாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்று மற்றும் மேகக்கூட்டங்கள் குவிந்து வருவதால் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை தொடரும் என தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் மயிலாடுதுறையில் 14 சென்டி மீட்டரும், புதுக்கோட்டை, குடவாசல் ஆகிய பகுதிகளில் 13 சென்டி மீட்டரும், அணைக்காரன்சத்திரம் காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் 12 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் - வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம்...? டெபாசிட் தொகை எவ்வளவு செலுத்த வேண்டும்...?


வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவின வரம்பானது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோருக்கு ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ. 34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ.85 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவோர்களுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் செலவு செய்யலாம் என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 தினங்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவினக் கணக்குகளை ஒப்படைத்திட வேண்டும். ஒப்படைக்கத் தவறுபவர்கள் மீது தேர்தல் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இயலாதவாறு மூன்று ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை விபரங்கள்:

பொதுப்பிரிவை சேர்ந்த வேட்பாளர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.200, கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.600, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.600, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1000 டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.

வேட்பாளர்கள் பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6-ல் ஒருபங்கு வாக்குகளை பெற்றிருந்தால், அவர்களின் டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும். உதாரணமாக ஒரு ஊராட்சி வார்டில் 60 வாக்குகள் பதிவானது என்று எடுத்துக்கொண்டால், 10 மற்றும் அதற்கு மேல் வாக்குகளை பெறும் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை திரும்ப பெற தகுதியானவர்கள் ஆவர்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள்

2019ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடியை அறிந்துகொள்வது மிகவும் எளிமையாக பட்டுள்ளது மேலும் இதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை என்னை மட்டுமே வைத்து நீங்கள் வாக்களிக்கப் போகும் அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்


இந்த முறையை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எந்த இடத்தில் வாக்களிப்பீர் கள், நீங்கள் வாக்களிக்க வேண்டிய பூத்து எண், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்கும் வரிசை எண், உங்கள் பெயர் உங்கள் தந்தை பெயர் உங்கள் தெரு நீங்கள் வாக்களிக்கும் இடம் அனைத்தும் இதில் வரிசையாக பார்த்துக்கொள்ளலாம், மேலும் இந்த வலைதளத்தை பயன்படுத்தி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் தகவல்களையும் நீங்களே சரி பார்த்துக் கொள்ளலாம்

எதிர்வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
டிசம்பர் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 13 ஆம் தேதி வரை வேட்புமனு பெறப்படும் என தெரிவித்த அவர், 16 ஆம் தேதி வேட்புமனு மீதான மறுபரிசீலனை நடைபெறும் என தெரிவித்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இந்த தேதியில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி, வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, November 28, 2019

28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் குஷ்பு

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. 
இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். 
மேலும், அரசியலிலும் சில காலம் பயணித்தார் அம்மணி. ஆனால், அரசியலில் செல்ஃப் எடுக்காத காரணத்தினால் மீண்டும் சினிமாவிற்கே திரும்பியுள்ளார்.  தொலைகாட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், பல ஆண்டு காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த குஷ்பு இப்போது மீண்டும் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். 

ஆம், இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிகை குஷ்பு ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்க்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், உறுதி செய்யப்பட்டதும் அதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறுகிறார்கள்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. நடிகைகுஷ்பு கடந்த 1992-ம் ஆண்டு வெளியான அண்ணாமலை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு, 28 வருடங்கள் கழித்து ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாக தான் இருக்கும்.

கார்த்தி சிதம்பரத்தின் தந்தை

 "சிறையில் இது எனக்கு 100வது நாள், அமலாக்கத்துறை இதுவரை என்னிடம் விசாரணை நடத்தியதில்லை, எந்த ஒரு சாட்சியையும் நான் எதிர்கொள்ளவில்லை"

- ப.சிதம்பரம் கூறியதாக கபில் சிபல் வெளியிட்ட தகவல்

பதவி ஏற்பு விழா ஸ்டாலினுக்கு அழைப்பு

ஆந்திரா அரசு பதவியேற்புக்கு தமிழக எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு

தெலுங்கானா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு

கர்நாடக அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு

மகாராஷ்டிரா அரசு பதவியேற்புக்கு எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு

ரோடு முழுக்க அல்வாவை கொட்டி வச்சிருக்கானுவ

நெல்லைக்காரனுங்களுக்கு கொழுப்ப பார்த்தியாலே...ரோடு முழுக்க அல்வாவை கொட்டி வச்சிருக்கானுவ

Jharkhand to vote in five phases from November 30, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்


ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை 5 கட்டமாக நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குகளும் டிசம்பர் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக சி வோட்டர் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. 
இதன் முடிவுகள் விவரம்: 
  1. பாஜகவுக்கு 28 முதல் 38 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 41 தொகுதிகளை பாஜக கைப்பற்றுவது கடினம். 
  2. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 18 முதல் 28 இடங்கள் கிடைக்கும்.
  3. காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 10 இடங்கள் கிடைக்கும்.
  4. ஏஜேஎஸ்யூ கட்சிக்கு 4 முதல் 10 தொகுதிகள் கிடைக்கும் என்பதால் இம்முறையும் ஏஜேஎஸ்யூ தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும். 

இதர கட்சிகள் 3 முதல் 9 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது. இவ்வாறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.


36 ஆண்டுகள் தனது நடிப்புத் திறமையால் வில்லனாக கோலொச்சியவர்..


சென்னை: தமிழ் சினிமாவில் 36 ஆண்டுகள் தனது நடிப்பு திறமையால் கோலொச்சிய நடிகர் பாலா சிங்கின் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் பாலா சிங் 1952ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையில் பிறந்தார். பள்ளி நாட்களிலேயே நடிப்பு மீது தீராத காதல் கொண்ட பாலா சிங், நடிப்புக்கான எந்த மேடை கிடைத்தாலும் அதனை அழகாக பயன்படுத்தி வந்துள்ளார்.

கல்லூரி காலத்திலும் மேடை நாடகங்களில் ஆர்வம் கொண்டார் பாலா சிங். அப்போதே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நடிப்பு மீது கொண்ட காதலால் கல்லூரி காலத்திலேயே சென்னை தேசிய நாடக பள்ளியில் சேர்ந்து முறையாக நடிப்பு பயின்றார்.
  • மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர், மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். மலையாளத்தில் முதல் படமான மலை முகலிலே தெய்வம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிட்டின.
  • தமிழில் நடிகர் நாசரின் அறிமுகம் கிடைக்க 1995ஆம் ஆண்டு அவர் எழுதி இயக்கி நடித்த அவதாரம் படத்தில் நடித்தார் பாலா சிங். அந்த படத்தில் அவரது நடிப்பு நல்ல விமர்சனத்தை பெற்றது.
இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் கவனத்தை பெற்றார் பாலா சிங். இதன் பலனாக இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் இந்தியன் படத்தில் கமல்சஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்த பாலா சிங், மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலும் நடித்திருந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பாலா சிங் பல முன்னணி நடிகர்களுடன் வில்லனாக நடித்துள்ளார்.

குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தார் பாலா சிங். கடைசியாக நடிகர் ஆர்யா நடிப்பில் வெளி வந்த மகாமுனி படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தார். அதுதான் அவர் தமிழில் நடித்த கடைசி படம்.

சினிமாவில் மட்டுமின்றி டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார் பாலா சிங். சூலம், ருத்ரவீணை, நல்ல நேரம், ஆதிரா ஆகிய நான்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.

தீவிர சிகிச்சை :

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை அவரது சொந்த ஊரான களியக்காவிளைக்கு உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. பாலா சிங்கின் மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான பாலா சிங்கின் மரணம் திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமாகிடிச்சி.. இன்னும் ஒரு வாரத்திற்கு மழை இருக்கு!

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய நிலையில் நல்ல மழை என்பதையே தமிழகம் இந்த ஆண்டு பார்க்கவில்லை. இந்த நிலையில் அரபிக் கடலில் ஏற்பட்ட புயலும் வெளிநாடு பக்கம் சென்றுவிட்டது. இதையடுத்து வங்கக் கடலில் உருவான புயல் மேற்கு வங்கம் பக்கமாக திரும்பிவிட்டது.

இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் நீண்ட நாட்களாக நல்ல மழையில்லை. அவ்வப்போது தமிழகத்தின் பல இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது.

போலீஸாக மாறிய ஜவுளிக்கடை பொம்மைகள்... வாகன ஓட்டிகளின் 'அந்த' பழக்கம்தான் இதற்கு காரணம்...

பெங்களூர் நகரின் முக்கியமான ஒரு சில இடங்களில் போலீசார் தற்போது பொம்மைகளை நிறுவியுள்ளனர். அவற்றுக்கு போக்குவரத்து போலீசார் போன்று உடை அணிவிக்கப்பட்டுள்ளது. எனவே போலீசார் நிற்கிறார்கள் என பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் என நம்பப்படுகிறது.


உண்மையில் இவ்வாறான ஒரு பழக்கம் வாகன ஓட்டிகளிடம் இருக்கவே செய்கிறது. அதாவது போலீசார் நிற்பதை பார்த்த பிறகுதான் பலர் அவசர அவசரமாக ஹெல்மெட்டை அணிவார்கள். அதேபோல் பலர் சீட் பெல்ட்டை அணிவதும் கூட போலீசாரை பார்த்த பிறகுதான். செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் கூட போலீசாரை பார்த்தால், உடனடியாக செல்போனை வைத்து விடுவார்கள்.

எனவேதான் இவ்வாறான ஒரு அதிரடி யோசனை பெங்களூர் போலீசாருக்கு உதித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அரை டஜன் ஜங்ஷன்களில் இந்த பொம்மைகளை போலீசார் நிறுவியுள்ளனர். இந்த திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், மேலும் 174 பொம்மைகளை முக்கியமான இடங்களில் நிறுவ பெங்களூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் இந்த திட்டத்திற்கு காவல் துறைக்குள்ளேயே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் இந்த திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

எனவே இது தேவையில்லாத செலவு என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. பெங்களூர் போலீசார் எடுத்துள்ள இந்த நடவடிக்கை பயன் அளிக்குமா? அல்லது இது தேவையற்ற திட்டமா? என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்

மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக இன்று பதவியேற்கிறார்

மும்பை: மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்கிறார். மகாரஷ்டிராவில் ஒரு மாதமாக நடைபெற்ற பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு இடையே காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி இணைந்து புதிய கூட்டணி அரசு உருவாகி உள்ளது. இந்த கூட்டணியின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார்.



மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை நடைபெறும் விழாவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.

முன்னதாக டெல்லி சென்ற உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். சிவசேனாவின் சார்பில் ஏற்கனவே மனகோர் ஜோஷி, நாராயண் ரானே ஆகியோர் முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். சிவசேனாவின் 3-வது முதல்வர் உத்தவ் தாக்கரே. பிரதமர் மோடி வாழ்த்து இதனிடையே முதல்வராக பொறுப்பேற்கும் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பதவி ஏற்புவிழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தார்.


Saturday, November 23, 2019

விடாமல் துரத்துகிறார்…மரியான் நடிகை போலீசில் புகார்..! முகநூல் விபரீதங்கள்


பூ, மரியான் உள்ளிட்ட படங்களின் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை பார்வதி மேனன், அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர், விரட்டி விரட்டி தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். முகநூல் மூலம் ஆரம்பித்த தொல்லையின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

பூ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி தனுஷுடன் மரியான் படத்தில் இணைந்ததால் பிரபலமானவர் மலையாள நடிகை பார்வதி மேனன். தற்போது மலையாள படங்களில் நடித்து வருவதோடு, பெண்ணிய சிந்தனையாளராகவும், பறவைகள் நல ஆர்வலராகவும் விளங்கும் நடிகை பார்வதி மேனன் தன்னை ஒருவர் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்து தொல்லை தருவதாக கேரள போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தனது சகோதரரின் முகநூல் மெசேஞ்சர் மூலம் முதலில் தன்னை பற்றி விசாரித்த கிஷோர் என்ற நபர் தன்னை சினிமா இயக்குனர் என கூறிக் கொண்டு அறிமுகமானதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக மெசேஞ்சரில் தகவல்களை தெரிவித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் தன்னை பற்றி தேவையில்லாத தகவல்களை கேட்டதாகவும், அத்தோடு இல்லாமல், கொச்சியில் இருந்து கொண்டு தான் அமெரிக்காவில் வசிப்பதாக கூறி தொடர்ந்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் முக நூல் கணக்கிலும் நேரிலும் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார் பார்வதி மேனன்.

ஒரு கட்டத்தில் தான் செல்லும் இடங்களுக்கு, தவறான நோக்கத்துடன் தன்னை பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதையடுத்து நடிகை பார்வதி மேனனை துரத்தி துரத்தி தொல்லை கொடுத்த அந்த நபர் கொச்சியை சேர்ந்த வழக்கறிஞர் கிஷோர் என்பதை கண்டறிந்த காவல்துறையினர் அவர் மீது 354 டி மற்றும் இந்திய தண்டனை சட்டம் 120 ஓ பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்

தேர்தலுக்குப் பின் பெயர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள் - நடப்பது என்ன?

இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் ஊடாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஆட்சி மாற்றம் நடந்த பிறகு பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள ஊர்களின் பெயர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான தமிழ் பேசும் சமூகம் ஆதரவளிக்காத நிலையில், பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் வாக்குகள் மாத்திரமே கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர வைக்க வழி வகுத்திருந்தது.
இலங்கை தமிழ் மக்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாஸவிற்கே வாக்குகளை வழங்குவர் என்பது ஆரம்பத்திலேயே கணிக்கப்பட்டது.

எனினும், எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இலங்கை வாழ் தமிழ் பேசும் சமூகம் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவை வழங்கியிருந்தது.
இந்த நிலையில், ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுரம் - ருவன்வெலி சாய விஹாரை வளாகத்தில் கடந்த 18ஆம் தேதி பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
    ''இந்த வெற்றிக்கான பிரதான காரணம், இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை பௌத்த மக்கள் என்பதை நாம் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தோம். சிங்கள மக்களின் ஒத்துழைப்புடன் மாத்திரம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என நான் அறிந்திருந்த போதிலும், நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தேன். இந்த வெற்றியில் பங்குதாரராகுமாறு நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்தேன். எனினும், அதற்கான பதில் எதிர்பார்த்த அளவு கூட கிடைக்கவில்லை. எனினும், நான் உங்களின் புதிய ஜனாதிபதி என்ற வகையில் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து, உண்மையான இலங்கையர்கள் என்ற விதத்தில் என்னுடன் இணைந்து பயணிக்குமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்," என தனது முதல் உரையில் கூறியிருந்தார்.