வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, December 2, 2019

எதிர்வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
டிசம்பர் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 13 ஆம் தேதி வரை வேட்புமனு பெறப்படும் என தெரிவித்த அவர், 16 ஆம் தேதி வேட்புமனு மீதான மறுபரிசீலனை நடைபெறும் என தெரிவித்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இந்த தேதியில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி, வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment