வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Thursday, November 28, 2019

Jharkhand to vote in five phases from November 30, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்


ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை 5 கட்டமாக நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குகளும் டிசம்பர் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

81 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக சி வோட்டர் கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. 
இதன் முடிவுகள் விவரம்: 
  1. பாஜகவுக்கு 28 முதல் 38 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான 41 தொகுதிகளை பாஜக கைப்பற்றுவது கடினம். 
  2. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 18 முதல் 28 இடங்கள் கிடைக்கும்.
  3. காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 10 இடங்கள் கிடைக்கும்.
  4. ஏஜேஎஸ்யூ கட்சிக்கு 4 முதல் 10 தொகுதிகள் கிடைக்கும் என்பதால் இம்முறையும் ஏஜேஎஸ்யூ தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கும். 

இதர கட்சிகள் 3 முதல் 9 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது. இவ்வாறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.


0 comments:

Post a Comment