வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, November 23, 2019

மோடி பணம் கொடுத்ததாக நம்பியவருக்கு ஏமாற்றம்!



SBI வங்கி கணக்கில் தானாக வந்த பணம்; மோடி கொடுத்ததாக நம்பியவருக்கு ஏமாற்றம்!


BHOPAL: மத்திய பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தில் உள்ள எஸ்பிஐ (SBI) வங்கியில் வாடிக்கையாளர் ஒருவரது வங்கி கணக்கில் மாதம் மாதம் மர்மமான முறையில் பணம் தானாக வந்துள்ளது. 

இதனைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர் பிரதமர் நரேந்திர மோடி தான் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கறுப்பு பணத்தை மீட்டு நாட்டு குடிமக்களுக்கு விநியோகிப்பதாக நம்பியுள்ளார். எனினும், அவரது மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை 

இதில் நகைச்சுவையான நிகழ்வாக, ஆலம்பூரில் உள்ள ஒரு எஸ்பிஐ கிளையின் மேலாளரான ராஜேஷ் சோன்கர், இரண்டு வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியான வங்கி கணக்கு எண்களை வழங்கியுள்ளார்.

ஹுக்கும் சிங் (ரூராய் கிராமத்தைச் சேர்ந்தவர்) மற்றும் ஹுக்கும் சிங் (ரோனி கிராமத்தைச் சேர்ந்தவர்) ஆகியோரின் பாஸ்புக்குகள் அவர்களின் புகைப்படங்களைத் தவிர மற்ற அனைத்து தகவல்களும் இருவருக்கும் சரியான பொருத்தமாக இருந்துள்ளது. இதுவே ஒரே வங்கி கணக்கை இரண்டு பேர் வைத்துள்ளது போல் இருந்து வந்துள்ளது. 

இருவரும் ஒரே வங்கியில் கணக்கு ஆரம்பிக்க தனித்தனியாக வருகை தந்துள்ளனர். இதில், வங்கி கணக்கை ஆரம்பித்த ஹூக்கும் சிங்கில் ஒருவர் வேலை தேடி ஹரியானாவுக்கு சென்றுள்ளார். அங்கு தான் வேலை பார்த்து சிறுக சிறுக சேர்த்த பணத்தை தனது வங்கி கணக்கில் சேமித்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த மாதம் (ரூராய் கிராமத்தை சேர்ந்த) ஹூக்கும் சிங், தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க சென்ற போது தான் அந்த கணக்கில் ரூ.35,400 மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது. அவரது கணக்கில் ரூ.1,40,000 இருந்திருக்க வேண்டும். இதையடுத்து, அவர் வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். 
அதன் பின்னரே நடந்த இந்த குழப்பம் முழுவதும் அனைவருக்கும் தெளிவாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பணத்தை செலவு செய்த ஹூக்கும் சிங் கூறும்போது, வங்கி கணக்கிற்கு தானாக பணம் வந்ததும், மோடிஜி தான் பணம் தருகிறார் என்று நினைத்து அதனை செலவு செய்தேன். என்னிடம் பணம் இல்லை, எனக்கு அது தேவைப்பட்டது என்று அவர் கூறினார். 

Related Posts:

  • புலிக்கு இறைச்சி ஊட்டிய 'ஜங்கிள் குயின்' அசின்!அதென்னமோ தெரியவில்லை... முன்னணி நடிகைகள் எல்லாம் சமீப காலமாக காடு, புலிகள் என எக்கச்சக்க அட்வென்ச்சர் தேடித் திரிகிறார்கள். போனவாரம் த்ரிஷா நடுக்காட்டில் புலியுடன் தங்கியிருக்க ஆசைப்பட்டு ராஜஸ்தான் போயிருந்தார். இந்த வாரம் … Read More
  • கிரைண்டர் அல்லது மிக்சி - தி.மு.க., : கிரைண்டர் + மிக்சி - அ.தி.மு.க., : சபாஷ் சரியான போட்டி* வீடுதோறும் கிரைண்டரும், மிக்சியும் சேர்த்து தரப்படும். * ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலி இலவசம். * விதவைப் பெண்கள் அனைவருக்கும், இலவச தையல் மிஷின் வழங்கப்படும். * அனைத்து குடும்பங்களுக்கும் இலவச மொபைல் போ… Read More
  • ஃபிகர் மடக்குவது எப்படி? - 2 - ஃபிகருக்கு என்ன பிடிக்கும்? மொதல்ல ஓட்டு போட்டு இரண்டாவது பகுதி எழுத வச்ச எல்லா நண்பர்களுக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ். எடிட்டர்டேர்ந்து காப்பாத்திட்டீங்க பாஸ். தலைப்பில இலக்கணப் பிழை கண்டுபிடிச்சு மெயில் போட்ட தூத்துக்குடி சிவாவுக்கு : (… Read More
  • ஹன்ஸிகாவுடன் 'ஆட்டத்தை'த் தொடங்கினார் உதயநிதி!ஒரு கல் ஒரு கண்ணாடி (அதாவது ஓகே ஓகே) படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.  பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் 'ஸ்டார் இயக்குநர்' அந்தஸ்தை எட்டிப் பிடித்துவிட்ட ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயனாக அறிமுகாக… Read More
  • ஃபிகர் மடக்குவது எப்படி?- 1ஃபிகர் மடக்குவது எப்படி?மேட்டருக்கு வர்ரதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஃப்ளேஷ்பேக்...இந்த ஹீரோவெல்லாம் படத்துல நான் ஏன் தாதாவானேண் சொல்லுவாங்கள்ளே அந்த மாதிரி.......... ரவுண்டு ரவுண்டு ரவுண்டு...ஃப்ளாஷ்பேக் ஆரம்பம்...நம்ம சட்னி சா… Read More

0 comments:

Post a Comment