வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, November 23, 2019

விடாமல் துரத்துகிறார்…மரியான் நடிகை போலீசில் புகார்..! முகநூல் விபரீதங்கள்


பூ, மரியான் உள்ளிட்ட படங்களின் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை பார்வதி மேனன், அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர், விரட்டி விரட்டி தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். முகநூல் மூலம் ஆரம்பித்த தொல்லையின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

பூ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி தனுஷுடன் மரியான் படத்தில் இணைந்ததால் பிரபலமானவர் மலையாள நடிகை பார்வதி மேனன். தற்போது மலையாள படங்களில் நடித்து வருவதோடு, பெண்ணிய சிந்தனையாளராகவும், பறவைகள் நல ஆர்வலராகவும் விளங்கும் நடிகை பார்வதி மேனன் தன்னை ஒருவர் தொடர்ந்து பின் தொடர்ந்து வந்து தொல்லை தருவதாக கேரள போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தனது சகோதரரின் முகநூல் மெசேஞ்சர் மூலம் முதலில் தன்னை பற்றி விசாரித்த கிஷோர் என்ற நபர் தன்னை சினிமா இயக்குனர் என கூறிக் கொண்டு அறிமுகமானதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக மெசேஞ்சரில் தகவல்களை தெரிவித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் தன்னை பற்றி தேவையில்லாத தகவல்களை கேட்டதாகவும், அத்தோடு இல்லாமல், கொச்சியில் இருந்து கொண்டு தான் அமெரிக்காவில் வசிப்பதாக கூறி தொடர்ந்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் முக நூல் கணக்கிலும் நேரிலும் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார் பார்வதி மேனன்.

ஒரு கட்டத்தில் தான் செல்லும் இடங்களுக்கு, தவறான நோக்கத்துடன் தன்னை பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதையடுத்து நடிகை பார்வதி மேனனை துரத்தி துரத்தி தொல்லை கொடுத்த அந்த நபர் கொச்சியை சேர்ந்த வழக்கறிஞர் கிஷோர் என்பதை கண்டறிந்த காவல்துறையினர் அவர் மீது 354 டி மற்றும் இந்திய தண்டனை சட்டம் 120 ஓ பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்

0 comments:

Post a Comment