வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, April 18, 2020

ஊரடங்கு விதிமீறல்: ரூ.1 கோடி அபராதம் வசூல்

சென்னை: ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியவர்களிடம் இருந்து ரூ.1 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் போது, விதிகளை பின்பற்றாமல், அத்யாவசியமின்றி சாலையில் சுற்றிய 2,28,823 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 1,94,339 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.1,06,74,294 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2,14,941 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment