வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, February 18, 2012

யுவராஜ்க்கு அமெரிக்காவில் சிகிச்சை...


முதல் கீமோதெரபி சிகிச்சைப் பிறகு புற்றுநோய்க் கட்டி பெருமளவில் குணமடைந்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் புற்றுநோய்க்காக அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வரும் அவர், டுவிட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை கூறியிருப்பது:

டாக்டர் லாரன்ஸிடம் இருந்து வியாழக்கிழமை நல்ல செய்தி கிடைத்தது. என்னுடைய ஸ்கேன் அறிக்கையை பார்த்துவிட்டு புற்றுநோய்க்கட்டி பெருமளவில் குறைந்துவிட்டதாகத் தெரிவித்தார். 2-வது கட்ட கீமோதெரபி சிகிச்சை தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அமெரிக்க சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் அனுப்பிய செய்தி, தனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 362 ரன்களைக் குவித்த யுவராஜ் சிங், 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். 2000-ம் ஆண்டில் அறிமுகமான அவர், இதுவரை 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,051 ரன்கள் குவித்துள்ளார்.

0 comments:

Post a Comment