வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, August 27, 2013

அரிய தகவல்கள் : 2013

1) முதன்முதலில் உருவாக்கப்பட்ட கேமிராவில் போட்டோ எடுக்க எட்டுமணிநேரம் உட்கார்ந்தே இருக்கணுமாம்!!


2) வெங்காயம் நறுக்கும் போது சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.


3) மூளையிலிருந்து மற்ற இடங்களுக்கும் மற்ற இடங்களிலிருந்துமூளைக்கும் செல்லும் கட்டளைகள் சுமார் 274கி.மீ வேகத்தில் அனுப்படுகின்றன!.

4) ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவையின் பெயர் லேரி!!
டிவிட்டரின் டிபால்ட் புரொபைல் பிக்ச்சராக முட்டை இருக்கக் காரணம் நாமெல்லாம் ட்விட்டர் பறவையின் குஞ்சுகளாம்! நம்ம ஹோம் பேஜ் ஒரு குருவிக்கூடு!
5) உங்களுடைய உதட்டின் நீளமும் ஆள்காட்டி விரலின் நீளமும் கிட்டத்தட்ட ஒரே அளவுதான்! அளந்து பாருங்க சரியா இருந்தா லைக் பண்ணுங்க.

* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன.

* மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள்உள்ளன.

* மண்புழு தோல்மூலம் சுவாசிக்கும்.

* தேனீயால் பச்சை, நீலம், ஊதா நிறங்களை பிரித்தறிய முடியும்.

* பூச்சி இனங்களில் தும்பியின் கண்கள் கூர்மையானவை.

* பட்டாம் பூச்சிக்கு நூரையீரல் இல்லை. அதன் வயிற்றுப் பகுதியில்உள்ள `ஸ்பிராக்கிள்' என்னும் துளைகள் வழியாக சுவாசிக்கின்றன.

* ஆண், பெண் இரண்டின் இனப் பெருக்க உறுப்புகளும் நத்தையில்காணப் படுகிறது. இதனால் அவை ஹெர்மப்ரோடைட்ஸ் என்று அழைக்கப்படுகிறத ு.

* யானையின்துதிக்க ை ஒரு லட்சம் தசைகளால் ஆனது. அதன் இதயம் நிமிடத்திற்கு 28 தடவை மட்டுமே துடிக்கின்றன.
* பூசணிக்கொடியின் வேர்கள் 2.4 கி.மீ. நீளம் வரை வளரும்.

* நத்தைக்கு 25 ஆயிரம் பற்கள் உண்டு.

* சாம்பிராணி ஒரு மரத்தின் பிசின் ஆகும்.

* அன்னாசிப் பழத்திற்கு விதைகள் கிடையாது.

* கரப்பான் பூச்சியின் இதயம் 13 அறைகளைக் கொண்டது.

* தேனீ நம்மைக் கொட்டியதுமே வலி ஏற்படக் காரணம் அது பார்மிக் என்னும் அமிலத்தை நம் உடம்பில் செலுத்துவதாகும் .

* தவளையின் இதயத்தில் மூன்று அறைகள் உள்ளன.

* ஈசலுக்கு ஜீரண உறுப்பு கிடையாது. அதனுடைய ஆயுட்காலம் ஒரே ஒரு நாள் மட்டுமே. 24 மணி நேரத்திற்கு மேல் அதனால் வாழ முடியாது.

* கறையான் வெப்பம் மிகுந்தநாடுகளில ் இருக்கும். ஆண்,பெண் கறையான், ஆணும் பெண்ணும்அல்லாத கறையான் என அவற்றில் மூன்று வகை உண்டு.
* வியர்வையை வெளியேற்றவே நாய்கள் நாக்கை தொங்க விடுகின்றன. ஏனெனில் நாய்களுக்கு மற்ற இடங்களில் வியர்வைச் சுரப்பிகள் இல்லை

* பச்சோந்தி அடிக்கடி தன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் காற்றை நிறைய உள்ளிழுத்து சுய உருவை விட பல மடங்கு பருத்துக் காணப்படும். இதனுடைய நாக்கு மிகவும் நீளமானது. 10 அங்குலத்திற்கு அப்பால் உள்ள பூச்சியை ஒரேயொரு நொடியில் கவரக்கூடிய சக்தி படைத்தது. இவையெல்லாவற்றைய ும் விட மிகவும்வியப்பை ஏற்படுத்துவது பச்சோந்தியின் கண்கள்தான். ஒரு கண் நேரில் இருப்பதை உற்று நோக்க, மற்றொரு கண் பின்னால் இருப்பதை பார்க்கும். அற்புதமான அமைப்பை உடையது. உலகில் வேறு எந்த உயிரினத்திற்கும ் இந்த அமைப்பு கிடையாது.

* ஆஸ்திரேலியாவிற் கு அருகில் நவ்ரு என்னும் மிகச் சிறிய தீவு இருக்கிறது. இந்நாட்டின் மக்கள் எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. வசிப்பதற்கு வீடு, உண்ண உணவு, உடுக்க உடை போன்ற அத்தியாவசியத் தேவை அனைத்தையும்அரசா ங்கமே கவனித்துக் கொள்கிறது. பாஸ்பேட் உரம் இயற்கையாகவே நவ்ரு நாட்டில் கிடைப்பதால் அதை அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈட்டுகிறது. வெளிநாட்டுக்குச ் செல்லவேண்டும் என்றால் கூட அரசாங்கமே எல்லாச் செலவுகளையும்ஏற் று குடிமக்களை அனுப்பி வைக்கிறது
.
* மத்திய தரைக் கடல் பகுதியில் தென் கிழக்கு பிரான்ஸ் எல்லையோரம் அமைந்துள்ள மிகச் சிறிய தீவு மோனாகோ. இது மொத்தமே அரை மைல் சதுர பரப்பளவு கொண்டதாகும். ஆனால் அளவை வைத்து இந்த தீவின் பொருளாதாரத்தை எடை போட்டு விட வேண்டாம். ஏனெனில் உலக கோடீஸ்வரர்களின் சொர்க்க புரியாக இந்த தீவு திகழ்கிறது. இங்கே ஒவ்வொரு கோடீஸ்வரரும் அவரவருக்குச் சொந்தமான ஆடம்பர, அலங்காரப் படகுகள் மூலம்தான் மதிக்கப்படுகிறா ர்கள். சுற்றுலாப் பயணிகளின் வரு மானத்தைக் கொண்டே இந்தத் தீவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.

* சுவீடன் நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் அந்நாட்டு அரசாங்கம் தனித்தனி எண்களைக் கொடுத்துள்ளது. அரசு நிறுவனங்கள் அவர்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அவர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள எண்களைக் கொண்டுதான் குறிப்பிட்டு வருகிறது. ஆண்களுக்கு இரட்டைப் படை எண்களும், பெண் களுக்கு ஒற்றைப்படை எண்களையும் கொடுத்துவருகின் றனர். வெளிநாடுகளில் இருந்து வந்து சில காலம் தங்குவோருக்கும் கூட இது போன்ற எண்கள் கொண்ட அடையாள அட்டையை தருகிறார்கள். இதன் மூலம் ஒவ்வொருவரது தேவையும் நடவடிக்கையும் கவனிக்கப்படுகிற து.

* 60 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர் அணிந்திருக்கும் (tie) டையின் நிறத்தை வைத்தே அவர் எந்த ஊர்க்காரர் என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடியும். பச்சைநிற டை கட்டியிருந்தால் அவர் பாஸ்டனைச் சேர்ந்தவர். சிவப்பு நிறம் என்றால் அவர் சிகாகோகாரர். இப்படி ஒவ்வொரு பெரிய நகரத்துவாசிகளும ் தங்க ளுக்கென்று விசேஷமாக டை தயாரித்துக் கொண்டார்கள். அதில் குறிப்பிட்ட கோடு நம்பர் களையும் குறிப்பிட்டு வைத்தார்கள். அப்போதுதான் நவீன டை அறிமுகமாகியிருந ்ததால் அதை இரவில் கூட பலர் கழற்றாமல் அணிந்து கொண்டே தூங்கினார்கள்.. ..

விஜய்யின் ஜில்லா படத்துக்கு வந்த பிரச்சினை!


விஜய்யின் தலைவா படத்திற்கு கடைசி நேரத்தில் வரிவிலக்கு தரமுடியாது என்று கைவிரித்தது போன்று விஜய்யின் ஜில்லா படத்துக்கும் அதே நிலமை ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் தலைவா படத்தில் நிறைய ஆங்கிலச் சொற்கள் படத்தின் வசனத்தில் வருகின்றன என்று காரணம் காட்டித்தான் படத்திற்கு வரி விலக்கு தர முடியாது என்று சொல்லப்பட்டது. இதனால் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதிலும் பிரச்சினை ஏற்பட்டது. வரிவிலக்கு இல்லாவிட்டால் படத்தை மினிமம் கியாரன்டியில் படத்தை வாங்க முடியாது என்று கையை விரித்துவிட்டனர் திரையரங்கு உரிமையாளர்கள். அதைத் தொடர்ந்து ஒரு வழியாக தலைவா ரிலீஸ் ஆனது.

விஜய் இப்போது பிஸியாக ஜில்லா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சவுத்ரி தயாரிக்கும் ஜில்லா படத்தை நேசன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். ஜில்லா படம் பொங்கல் அன்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்துக்கும் வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல் கிளம்பியுள்ளது. அரசு வரிச்சலுகைக்கு விண்ணப்பிக்கும் படங்களிளுக்கு தலைப்பு தமிழில் இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் ஜில்லா படத்தின் டைட்டில் வடமொழியில் உள்ளது. எனவே வரிச்சலுகை கிடைப்பது சந்தேகம் என்கிறார்கள் சிலர்.

தலைவாவுக்காக கடைசி நேரத்தில் என்னென்ன மாற்றம் எல்லாமோ செஞ்சாங்க, ஜில்லாவுக்கு வரிசலுகை இல்லைன்னா கடைசி நேரத்தில தலைப்பையும் மாற்றத் தயங்க மாட்டாங்க, அதுக்கு பேசாம இப்பவே மாத்திடுறது நல்லது…!

நடிகையும் நடிகனும் மூடிய அறைக்குள் மூன்றுநாள் அடைப்பு!!!

மூடிய அறைக்குள் 3 நாட்களாக ஒரு ஹீரோவையும், ஹீரோயினையும் அடைத்து வைத்து அவர்களுக்குள் கெமிஸ்ட்ரியை டெவலப் பண்ண டைம் கொடுத்து அப்புறம் ஷூட்டிங்கை வைத்துள்ளனர் பாலிவுட்டில். இந்த வித்தியாசமான டீலிங் நன்றாகவே கை கொடுத்ததாம்.. காரணம் படப்பிடிப்பின்போது ஹீரோவும், ஹீரோயினும் செம அன்னியோன்மாக நடித்துக் கொடுத்து அசத்தி விட்டனராம். சுத் தேசி ரொமான்ஸ் என்ற படத்திற்காகத்தான் இந்த ‘அலேக் போர்’….! பரினீதி சோப்ராதான் அந்த அழகான ஹீரோயின். அவர்தான் சுத் தேசி ரொமான்ஸ் படத்தில் காதல் காட்சிகளில் கலக்கியவர். அவருக்கு ஜோடியாக வருபவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். ஹேன்ட்சம் ஹீரோக்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள சுஷாந்த் காதல் காட்சிகளில் பரினீதியுடன் நன்கு இழைந்து இழைந்து நடித்துக் கொடுத்தாராம். தேரே மேரே பீச் மெய்ன் கியா ஹை என்ற பாடலுக்காகத்தான் இந்த 3 நாள் உள் வைப்பு அணுகுமுறையாம். இந்தப் பாட்டில் காதலும், கவர்ச்சியும், காமமும் நன்றாக வெளிப்பட வேண்டும் என்று விரும்பிய இயக்குநர் மனீஷ் சர்மா, ஹீரோவும், ஹீரோயினும் நன்கு அன்னியோன்யமாக பழக வேண்டு்ம் என்று நினைத்து 3 நாள் உள்ளேயே இருங்க என்று கூறினாராம். இதைக் கேட்ட பரீனிதியும், சுஷாந்த்தும் உடனே ஓ.கே. என்று சொல்லி விட்டார்களாம்.. பிறகென்ன ரெண்டு பேரையும் உள்ளே தள்ளி பூட்டி விட்டனர். 3 நாள் கழித்து வெளியே அழைத்து வரப்பட்ட இருவரையும் வைத்து அந்தப் பாட்டை படமாக்கினார்களாம். சும்மா சொல்லக் கூடாது.. பாட்டு படு சூப்பராக வந்திருக்காம்.. காரணம், இருவரின் நடிப்பும் அப்படி… ஆஹா..கெமிஸ்ட்ரிக்காகத்தானே அனுப்பினார்கள்.. கெமிஸ்ட்ரி மட்டும் தான் ஒர்கவுட் ஆனதா….. இல்லை…… 
 முடிவு 10 மாதத்தில் தெரியவரும் தானே..! 

Saturday, August 24, 2013

நம்ம எம்.பி.க்கள் சாப்பிடும் நாடாளுமன்ற கேண்டீன் விலை விபரம்!

நம்ம எம்.பி.க்கள் சாப்பிடும் நாடாளுமன்ற கேண்டீன் விலை விபரம்!
***********************************************************



டீயின் விலை ரூ1.00

சூப் விலை ரூ5.50

சப்பாத்தி ரூ.1.00

சாதம் ரூ.2.00

தோசை ரூ.4.00

பிரியாணி ரூ.8.00

சிக்கன் பிரியாணி ரூ.34.00

வெஜ் தாளி ரூ.12.50

நான்வெஜ் தாளி ரூ.22.00

தயிர் சாதம் ரூ.11.00

மீன் சாப்பாடு ரூ.13.00

மீன் வறுவல் ரூ. 17.00

சிக்கன் கறி ரூ.20.50

சிக்கன் மசாலா ரூ.24.50

பட்டர் சிக்கன் ரூ.37.00

லட்சம் கதை சொல்லும் ஒரு படம்..



லட்சம் கதை சொல்லும் ஒரு படம்..

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.



2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.

3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.

4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு , பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.


5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.

6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.

7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.

8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.

9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.

10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.

# சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்.

அரசியலுக்கு வரும் எண்ணமில்லை...

ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றம் கலைப்பு - நடிகர் விஜய்


எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. மீறி என் ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் மன்றத்தைக் கலைத்துவிடுவேன், என்று விஜய் அறிவித்துள்ளார். இனி ரசிகர் மன்ற விவகாரங்களில் தன் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் ஈடுபடமாட்டார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

 நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் தன் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றினார். அதற்கென தனி கொடியையும் நயன்தாராவை வைத்து வெளியிட்டார். தொடர்ந்து ஆங்காங்கே நிகழ்ச்சிகள் நடத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இலவசத் திருமண நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். 

திடீரென ஒரு நாள் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்துவிட்டு வந்து பிரஸ் மீட் வைத்து அறிவித்தார். ராகுல் காந்தியே தன்னை அழைத்ததாகக் கூறினார். ஆனால் ராகுல் காந்தியோ தான் யாரையும் அழைக்கவில்லை என்றும், அப்பாயின்ட்மென்ட் கேட்டு வந்ததால் விஜய்யைச் சந்தித்தேன் என்றும் கூறினார். 

தொடர்ந்து காவலன் படம் வெளியீட்டுக்கு அப்போதைய ஆளும்கட்சி திமுக முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறி பேட்டிகள் கொடுத்த விஜய், திடீரென ஒரு திருமணத்தில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவைச் சந்தித்து வணக்கம் வைத்தார். தொடர்ந்து தேர்தலின்போது அதிமுகவை ஆதரிப்பதாகக் கூறினார். 

போயஸ் தோட்டத்துக்குப் போய் ஜெயலலிதாவை தன் தந்தையுடன் சந்தித்தார். அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவரும் அறிந்ததே.எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. நண்பன், துப்பாக்கி என இரு படங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் வெளியாகி, வசூலையும் கொடுத்தன. இந்த நேரத்தில் விஜய் பெரிய அளவில் அரசியலில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதாக பேச்சுகள் கிளம்பின. 

அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் போகும் இடமெல்லாம் அப்படித்தான் பேசி வந்தார். ரசிகர் மன்ற விளம்பரங்களில் ஒரு பக்கம் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு புரட்சித் தலைவி அம்மா என்று குறிப்பிட்டிருந்த நிர்வாகிகள், அதற்கு எதிர்ப்பக்கம் எஸ் ஏ சந்திரசேகரன் படத்தைப் போட்டு புரட்சி இயக்குநர் அப்பா என குறிப்பிட்டிருந்தார்கள். இது அதிமுகவினரை மட்டுமல்ல, பார்த்த அனைவரையுமே முகம் சுழிக்க வைத்தது. நான் அண்ணாவைப் போன்றவன்.. 


என் மகன் எம்ஜிஆரைப் போன்ற ஆற்றல் மிக்கவன் என்று ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார் எஸ்ஏ சந்திரசேகரன். இந்த நேரத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தலைவா என்று தலைப்பிட்டு, அதற்குக் கீழே தலைமை ஏற்கும் நேரம் இது என ஆங்கில வாசகம் வைத்திருந்தார்கள். படத்தில் வரும் பாத்திரங்களில், விஜய்யின் அப்பாவாக வரும் சத்யராஜுக்கு பெயர் அண்ணா. அண்ணாவுக்குப் பிறகு விஜய் தலைமை ஏற்க வருவதுபோல காட்சிகள் வசனங்கள் வைத்திருந்தனர். 

இந்தப் படம் வெளியாக பட்ட பாடுகள் எல்லாம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இந்த நிலையில்தான் நேற்று விஜய் திடீரென்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. தயவுசெய்து பேனர்களில் அரசியல் சம்பந்தப்பட்ட வசனங்களை போடவேண்டாம். அதையும் மீறி ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட மன்றங்களை கலைக்கக்கூட தயங்க மாட்டேன். 

 இனி ரசிகர் மன்ற விஷயங்களில் நானே நேரடியாக ஈடுபடுவேன்.
 என் தந்தையோ, வேறு யாரோ மன்ற விஷயங்களில்  தலையிடமாட்டார்கள்". -இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த அறிக்கை ட்விட்டரில் வெளியாகியிருந்தது.

Friday, August 23, 2013

திமுகவுடன் மீண்டும் கூட்டணிக்கு காங். மும்முரம்! ஞானதேசிகன் நீக்கப்படுகிறார்?

லோக்சபா தேர்தலில் திமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான ஆலோசனைகளை காங்கிரஸ் முடுக்கிவிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக திமுகவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்தது. திமுகவும், மத்திய அரசில் பங்கேற்றது. ஈழ இறுதிப் போர் நடைபெற்ற சூழலிலும் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. அண்மையில் தமிழக மாணவர்கள் போராட்டம் வெடித்த நிலையில் மத்திய அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாக திமுக அறிவித்தது. இருப்பினும் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி முதலில் அறிவித்தது. திமுக கேட்காமலேயே காங்கிரஸ் ஆதரவு தர முன்வந்த போதும் திமுக, தேமுதிகவை நம்பி இருந்தது. பின்னர் தேமுதிக- காங்கிரஸ் அணி உருவாகும் நிலையால் காங்கிரஸ் கதவுகளை திமுக மீண்டும் தட்ட ஆதரவும் கிடைத்தது.



ராகுலின் வியூகம்

              இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்கு தமிழகத்தில் எப்படி கூட்டணி அமைப்பது என்பது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ப. சிதம்பரம், ஜி.கே.வாசன், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன் ராகுல் விவாதித்துள்ளார்.



திருநாவுக்கரசர், கோபண்ணா, ஞானதேசிகன் இதேபோல் திருநாவுக்கரசர், ஞானதேசிகன், கோபண்ணா உள்ளிட்ட நிர்வாகிகளையும் ராகுல் நேரில் அழைத்து ஆலோசித்துள்ளார்.



திமுகவுக்கு அதிகம் 'ஜே' இப்படி தமிழகத்தில் இருந்து ராகுல் காந்தியால் அழைக்கப்படுவோரில் பெரும்பான்மையினோர் திமுகவுடனேயே மீண்டும் கூட்டணி அமைக்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர். ஒருசிலர் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறுவதாகவும் தெரிகிறது.



தேமுதிக- காங்கிரஸ் தனி அணி அதேபோல் தேமுதிக, காங்கிரஸ் மற்றும் சிறு கட்சிகள் இணைந்து தனி அணி அமைத்தால் இருக்கிற இடமே தெரியாமல் காங்கிரஸ் காணாமலேயே போய்விடும் என்று ராகுலிடம் தமிழக காங்கிரசார் கூறியுள்ளனர்.




ஞானதேசிகன் காட்டம் இந்தப் பின்னணியில்தான் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் திமுகவை சீண்டும் வகையில் கடுமையான அறிக்கை ஒன்றை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டதாக கூறப்படுகிறது.


கருணாநிதி பதிலடி ஞானதேசிகன் போன்றோர்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறப்படும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, ஞானதேசிகனை கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டார். வேதாந்தம் பேசுகிறார், ஞானோபதேசம் செய்கிறார் என்றெல்லாம் கருணாநிதி சாடியிருந்தார்.



காங். மேலிடம் எரிச்சல் ஒரு பக்கம், திமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க ராகுல் வழிகளை ஆராய்ந்து வரும் நிலையில் அதை கெடுக்கும் வகையில் ஞானதேசிகன் செயல்படுகிறார் என்று ஒருதரப்பு புகாரை டெல்லிக்கு தட்டிவிட்டது. இதனால் ஞானதேசிகனுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.




ஞானதேசிகனுக்கு ஆப்பு? திமுக -காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும் நிலையில் அனேகமாக ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

முகநூலில் முகத்தை காட்டியதால், பெண்ணின் உயிர்போன பரிதாபம்!



முகநூலில் முகத்தை காட்டியதால், பெண்ணின் உயிர்போன பரிதாபம்! சுஸ்மிதா என்ற இப்பெண் முகநூலில் தன்னுடைய படத்தை போட்டதை பதிவிறக்கம் செய்து கூகுளில் விலைமகளிர் பட்டியலில் சேர்த்து தவறாக பயன்படுத்திய கயவர்களால், அவமானம் தாங்காமல் உயிரிழந்தார்.

அன்புக்குரிய பேஸ்புக் பாவிக்கும் சகோதரிகளே உங்கள் புகைப்படங்களை பேஸ்புக்கில் போட வேண்டாம் மீண்டும் எஜ்ஜரிக்கிறேன். விபச்சாரிகளின் நிர்வாண உடலுக்கு உங்களின் முகத்தை அந்த நிர்வாண உடலில் இணைக்க பல கும்பல்கள் காத்திருக்கிறது எச்சரிக்கிறேன். 

***இன்றைய தமிழகம்***



கடவுளின் அருள் பெற்று பயன் அடைந்த
கூட்டத்தை விட
கடவுளின் பெயர் சொல்லி பயன் அடைந்த
கூட்டம் அதிகம்

தியானமும் யோகாவும் விற்பனைக்கு
ஞானமும் கடவுளும் கற்பனைக்கு

பாதி நேரம் அருளுரை
மீதி நேரம் ஆணுறை
கட்டினிலே கன்னி
கையிலே கமண்டலம்

ஆசையை துறந்தவர்கள் இருந்த
பதவியிலே இன்று
ஆடையை துறந்தவன் அமர்கிறான்

திரை போட்டு காட்டியும்
திருந்தாத மக்கள் _ சிலர்
கறை பட்ட பின்பும்
வருந்தாத மாக்கள்

இயற்கையின் விதி இணை
சேர வேண்டும்
இருபாலும் அதற்கு துணை
சேற வேண்டும்
அதற்கு முறையாக முன்னோர்கள்
வைத்த பெயர் திருமணம்

ஆனால்
அன்று கடல் கடந்து வியாபாரம்
இன்று கல்யாணத்தில் வியாபாரம்

சில பவுன் நகைக்கு ஆண்மையை
விக்கிறான்
தங்கத்தை கொடுத்தால்
அவன் தாய்மையை கொடுக்கிறான்

அன்று குளத்தடி நீரிலே
குளித்த என் தமிழினம் _ இன்று
நிலத்தடி நீரைகூட காணாமல்
தவிக்கிறது

நேர்மையை மறந்து விட்டோம்
நிம்மதி இழந்து விட்டோம்
நீதியை துறந்து விட்டோம் - அட
நீரை கூட இழந்து விட்டோம்

ஒரு படி அரிசிக்கி உரிமையை
விற்றோம் - பிச்சைக்கார
வேடத்தை பெருமையாக
பெற்றோம்

ஒரு வேளை காமதில்
சுகம் இல்லை என்றல்
கூடகுட மாட்டோம்
குழந்தையை free'ya கேட்போம்

அன்று சொந்தங்கள் கூட சொர்கத்தை
கண்டோம்
இன்று சொத்துக்காக சொந்தத்தை
மறந்தோம்

அன்று வழிபோக்கன் வாழ கூட
திண்ணையை வைத்தோம் - இன்று
வயதான பெற்றோரையே
தெருவிலே விட்டோம்

அன்று கோ உயர குடி உயர்ந்தது
இன்று குடி உயர கோ உயர்கிறது
அரசாங்கம் ஊத்தி தரும்
அநியாயம் போத்தி வரும்

கல்வியெல்லாம் தனியாரிடம்
காலமும் மதுக்கடை அரசிடம்
குடிக்க Beer இருக்க
படிக்க Book எதற்கு ?

நீதியில் நிலைத்து
நித்தமும் உழைத்து
நிம்மதியில் வாழ்ந்த
எம் தமிழனின்
வாழ்கை இனி
காணவும் கிடைகாது
அந்த காலமும் திரும்பாது

இன்னும்...

சோழனும் கம்பனும் வாழ்ந்த
எங்கள் பூமி என
பெருமை பட்டு கொள்வதால்
பயன் ஒன்றும் இல்லை
நம் இனதின் பெருமை மறைய
காலம் தூரம் இல்லை

- வை . நடராஜன்

Thursday, August 22, 2013

வைரமுத்து எழுத மறந்த கவிதை...!!!

கல்யாணம் பண்ணிப்பார்...

தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்...
காத்திருந்தால்....'வரட்டும்... இன்னிக்கி வச்சிருக்கேன்' என்பாய்...
வந்துவிட்டால்....'வந்திட்டியா செல்லம் போலாமா' என்பாய்....

வீட்டு வேலைக்காரி கூட உன்னை மதிக்காது -ஆனால்
வீடே உன் கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...

கார் வாங்கச்சொல்லி
கட்டியவள் வயிற்றில் மிதிக்க,
கடன் கொடுத்தவன் கழுத்தைப் பிடிக்க,
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த மானம், இந்த வெக்கம் ,
இந்த சூடு, இந்த சொரணை,
எல்லாம் கட்டிய நாளோடு
கழட்டி வைத்து விடுவது தான்
கொண்டவளை கவுரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்...!!!!!
கல்யாணம் பண்ணிபார்..!!!


Thanks - நகைச்சுவை துணுக்குகள் facebook

நாளை முதல் டைம்பாஸ்...


நாளை முதல் டைம்பாஸ்...



Wednesday, August 21, 2013

கண்ணா மூணாவது லட்டு திண்ண ஆசையா? - யார் இந்த நடிகர்?



கோட் சூட் போட்ட அல்டிமேட் நடிகர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கடவுள் நடிகரும் நடித்து வருகிறார். கடவுள் நடிகருக்கு ஜோடி களத்தில் ஆடிய டாப் நடிகை. ஷூட்டிங் சமயத்தில் எல்லாம் டாப் நடிகையுடன் தான் கடலையில் பொழுது போக்குகிறாராம் கடவுள் நடிகர். நைன் நடிகையுடன் காதல், யோகா டீச்சருடன் பார்ட்டியில் ஆட்டம், விரைவில் திருமணம் என ஏற்கனவே சார் ரொம்ப பிஸியோ பிசி. அம்மணியும் பார்ட்டி ப்ராளத்தில் சிக்கியவர் தான். இப்போது ஜாடிக்கேத்த மூடியா இருவரும் போடும் கடலையைப் பார்த்து, யூனிட்டில் உள்ளவர்கள் ‘கண்ணா மூணாவது லட்டு தின்ன ஆசையா..?' எனக் கிண்டலடிக்கிறார்களாம்.