வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, April 3, 2012

பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?



பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?
 
நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.
எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது 
மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்
ஏமாத்திக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.
அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.
டிக்கட் குடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்
அப்போதுதான் ஆரம்பிக்கிறது..அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து
சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார்.
சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார்.

தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.
அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால்
அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். 

அப்படி யாருடைய விசேஷ
நாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ
அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்
பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......
ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார். 

ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.
போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.
இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அரசியல இதெல்லாம் சாதரணமப்பா



ஒரு குடும்பம் பகுத்தறிவை அடகுவைத்து ஆட்சி நடத்தியது .. இன்னொரு குடும்பம் மதபோதகத்தை வைத்து பணம் பார்க்கிறது.

மக்களின் அதித நம்பிக்கை மூடநம்பிக்கையாக மாறும் பொது இத்தகைய ஊழல் பேர்வழிகள் உருவாகிக்கொண்டு தான் இருப்பார்கள்.






ஆத்திகமோ நாத்திகமோ .... விழிப்புணர்வு மிக முக்கியம் மக்களே...

பரீட்சைய விட இவங்களோட பேட்டிங் பவுலிங் பெருசாப் போச்சே( ஐபிஎல் 5 )

கொல்கத்தாவில் குழாய் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி....


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது, 90 டெசிபலுக்கு மிகாமல் ஒலி பெருக்கியை பயன்படுத்தி கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


மேற்கு வங்காளத்தில் அரசு பொதுத் தேர்வுகள் துவங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், தேர்வு முடியும் வரையிலும், மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் ஒலி பெருக்கி மற்றும் மைக்ரோபோன்கள் பயன்படுத்த மேற்கு வங்காள மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது.


இந்த நிலையில் இத்தடை உத்தரவை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிபதிகள் பி.கே.ரே, தீபன்கர் துத்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.


விசாரணை முடிவில் ஐபிஎல் போட்டிகளின் போது, கொல்கத்தா நைட் ரைடர் அணியினர் 90 டெசிபல் அளவுக்கு மிகாமல் ஒலி பெருக்கியை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.


பரீட்சைய விட இவங்களோட பேட்டிங் பவுலிங் பெருசாப் போச்சே...