வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, February 24, 2012

நான் யாரையும் காதலிக்கல.....

மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையை நான் காதலிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நான் யாரையும் காதலிக்கும் நிலையிலும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை பாவனா.


சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் பாவனா. ஒரு ரவுண்ட் வந்த பிறகு, தெலுங்குக்குப் போய்விட்டார். அங்கு கொஞ்ச காலம் பரபரப்பாக நடித்தார். இப்போது மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் மலையாள நடிகரும் கிரிக்கெட் வீரருமான ராஜீவ் பிள்ளையை அவர் காதலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பாவனா மலையாள நடிகர் அணிக்கு தூதுவராக பணியாற்றினார். அந்த அணியில் ராஜீவ் பிள்ளை முன்னணி வீரராக இருந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக சொல்கிறார்கள்.

ஆனால் இதை மறுத்துள்ளார் பாவனா. "ராஜீவ்பிள்ளையும் நானும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில்தான் சந்தித்தோம். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவரை நான் காதலிக்கவில்லை. இந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.

ராஜீவ் பிள்ளையும் இந்த செய்திகளை மறுத்துள்ளார்.

எவ்வளவு வேகமா மறுக்கிறாங்களோ அந்தளவுக்கு தீவிர காதல் இருக்கு என்று சினிமா டிக்ஷனரி சொல்கிறது... பார்க்கலாம்!

Monday, February 20, 2012

வாழ்க்கை ஒரு பெரிய வட்டம்...

வாழ்க்கை ஒரு பெரிய வட்டம்



நயனின் முன்னாள் காதலன் சிம்பு, தனது புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவருடன் பேச்சு நடத்தி வருகிறார் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே நயன்தாராவை தனது ஒஸ்தி படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார் சிம்பு. அப்போது நடிக்க மறுத்துவிட்டார் நயன். ஆனால் இப்போது, பிரபு தேவாவை விட்டு முற்றாக விலகிவிட்ட நிலையில், அனைத்து வித வாய்ப்புகளையும் பரிசீலிக்க ஆரம்பித்துவிட்டார்.

இப்போது அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்ட நயன், அடுத்து சிம்புவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் ஒரு முக்கிய இயக்குநர்.

நயன்-சிம்பு மீண்டும் ஜோடி என்ற செய்தியால் கிளம்பவிருக்கும் பரபரப்பு நல்ல வசூலைக் கொட்டும்.

Sunday, February 19, 2012

கவனச் சிதறல்களுக்கு காரணமாகும் ரிங்டோன்கள்

ரிப்போர்ட் - கவனச் சிதறல்களுக்கு காரணமாகும் ரிங்டோன்கள்

மொபைல் ரிங்டோன்கள் கவனச் சிதறல்களுக்கு காரணமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. மொபைல்களில் பிடித்த பாடல்களை ரிங்டோனாக வைப்பது அனைவரும் அறிந்த விஷயம். இன்றைய நவநாகரீக உலகில் இது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. ஆனால் இந்த ரிங்டோன் கவனக் குறைவை ஏற்படுத்துவதாக அமெரிக்காவிலுள்ள
வாஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். சில மாணவர்களை வைத்து பரிசோதனை செய்தனர். மாணவர்களை குறிப்பிட்ட பாடம் தொடர்பாக தேர்வு எழுத வைத்து இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. 30 நொடிகள் ரிங்டோன் கேட்ட பிறகு தேர்வு எழுத வைத்து சோதனை நடத்தப்பட்டது. இதில், அவர்கள் சாதாரணமாக தேர்வு எழுதியதைவிட ரிங்டோன் கேட்டபிறகு தேர்வு எழுதியதில் பல குளறுபடிகள் இருந்தன. தெளிவாக எழுதவும் இல்லை.

முதலில் எழுதியதில் உள்ள தெளிவைவிட 25% சதவிகிதம் குறைவாக இருப்பதை காட்டி இருக்கிறது, இந்த ஆய்வு. இதன் மூலம் ரிங்டோன்களால் ஏற்படும் கவண குறைவு மிக தெளிவாக எடுத்து காட்டப்பட்டுள்ளதாக ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ரிங்டோன்களை தவிர்த்து சைலன்ட் மோடில் மொபைலை வைத்து இருப்பது கூட நல்லது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். கவனத்தை குறைக்கும் இது போன்ற விஷயங்களில் இருந்து தள்ளி இருப்பது அவசியமாகிறது.

Saturday, February 18, 2012

நேற்று (17-2) 5 படங்கள் வெளியானது

இந்த வெள்ளிக்கிழமையும் கோலிவுட் ரொம்ப பிஸி. காரணம் 5 புதிய படங்கள். போனவாரம் 6 படங்கள் வெளியாகின. ஒவ்வொன்றும் ஒரு விதமான படம். இதில் 'தோனி'க்கு நல்ல பெயர். இந்த வாரம் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'உடும்பன்', 'காட்டுப்புலி' மற்றும் 'அம்புலி' என 5 படங்கள். இவற்றில் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அதர்வா-அமலா பால் நடித்துள்ள இந்தப் படம் ஒரு வித்தியாசமான த்ரில்லர் என்கிறார்கள்.
ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்து இயக்கியுள்ளார்.
'காதலில் சொதப்புவது எப்படி' படம் தமிழ் - தெலுங்கில் வெளியாகிறது. நடிகர் சித்தார்த் இந்தப் படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இதிலும் ஹீரோயின் அமலா பால்தான். சில நெருக்கடிகளைத் தாண்டி 'உடும்பன்' படம் வெளியாகிறது. உடும்பை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். அர்ஜுன் நடிப்பில் வரும் 'காட்டுப் புலி'யும் ஆக்ஷன் த்ரில்லர்தான்.
'அம்புலி' ஒரு 3 டி படம். மனோஜ் நைட் ஷியாமளனின் வில்லேஜ் மாதிரி. இவற்றோடு, கௌதம் மேனனின் 'ஏக் தீவானா தா' (விண்ணைத்தாண்டி வருவாயா)வும் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 11 அரங்குகளில் இந்தப் படம் ரிலீஸ்! ஆங்கிலப்படம் 'தி வுமன் இன் பிளாக்', ரவி தேஜாவின் தெலுங்குப் படம் 'நிப்பு' போன்றவையும் ரிலீஸ்.
எம்புட்டு மழை கொட்டுனாலும் சிப்பிக்குள் விழும் துளி எதுன்னுதான் பார்த்திடுவோம்.....

யுவராஜ்க்கு அமெரிக்காவில் சிகிச்சை...


முதல் கீமோதெரபி சிகிச்சைப் பிறகு புற்றுநோய்க் கட்டி பெருமளவில் குணமடைந்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் புற்றுநோய்க்காக அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வரும் அவர், டுவிட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை கூறியிருப்பது:

டாக்டர் லாரன்ஸிடம் இருந்து வியாழக்கிழமை நல்ல செய்தி கிடைத்தது. என்னுடைய ஸ்கேன் அறிக்கையை பார்த்துவிட்டு புற்றுநோய்க்கட்டி பெருமளவில் குறைந்துவிட்டதாகத் தெரிவித்தார். 2-வது கட்ட கீமோதெரபி சிகிச்சை தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அமெரிக்க சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் அனுப்பிய செய்தி, தனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 362 ரன்களைக் குவித்த யுவராஜ் சிங், 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். 2000-ம் ஆண்டில் அறிமுகமான அவர், இதுவரை 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,051 ரன்கள் குவித்துள்ளார்.