This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Tuesday, October 2, 2012
தமிழுக்கு வருகிறார் தெலுங்கு பிசினஸ்மேன்...!
ஜில்லென்ற ஐஸ் கட்டிகளை தலையில் வைத்தது போல் சிலிர்த்து நிற்கிறார்கள் இளவட்ட ஹீரோக்கள்....
Tuesday, April 3, 2012
பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?
நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.
எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது
மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்
ஏமாத்திக்கொண்டு என்று...
ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.
அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.
டிக்கட் குடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்
அப்போதுதான் ஆரம்பிக்கிறது..அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து
சிறிது நேரம் நிற்கும் போது.....
பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார்.
சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார்.
தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.
அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால்
அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார்.
நாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ
அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்
பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......
ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார்.
ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.
போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.
இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.
இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அரசியல இதெல்லாம் சாதரணமப்பா
பரீட்சைய விட இவங்களோட பேட்டிங் பவுலிங் பெருசாப் போச்சே( ஐபிஎல் 5 )
கொல்கத்தாவில் குழாய் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி....
மேற்கு வங்காளத்தில் அரசு பொதுத் தேர்வுகள் துவங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், தேர்வு முடியும் வரையிலும், மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் ஒலி பெருக்கி மற்றும் மைக்ரோபோன்கள் பயன்படுத்த மேற்கு வங்காள மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது.
இந்த நிலையில் இத்தடை உத்தரவை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிபதிகள் பி.கே.ரே, தீபன்கர் துத்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில் ஐபிஎல் போட்டிகளின் போது, கொல்கத்தா நைட் ரைடர் அணியினர் 90 டெசிபல் அளவுக்கு மிகாமல் ஒலி பெருக்கியை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
பரீட்சைய விட இவங்களோட பேட்டிங் பவுலிங் பெருசாப் போச்சே...
Wednesday, March 7, 2012
சிக்கன் 65 சாப்பிட விருப்பமா?
சிவப்பு நிறத்தில் மொறு மொறு என்று பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் உணவு சிக்கன் 65. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பிரபலமடைந்து வரும் இந்த உணவு கோழிக் கறியை வறுத்து செய்யப்படுகிறது. சிக்கன் 65 கண்ணைக் கவரும் விதத்தில் கலராக தெரியவேண்டும் என்பதற்காக சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம் மனித உடலுக்கும், குடலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
சிக்கன் 65 அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள், மரபணு பாதிப்புகளும் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் ரசாயனம் கலந்த மாமிச உணவுகளை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செயற்கை நிறங்கள்
உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அணுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எட்டு வகையான நிறங்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு. ஆனால் இதை யாரும் கடை பிடிப்பதில்லை.
அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும் என்று பிரபல குடல்நோய் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.
கழுத்துக் கழலை நோய்
சிக்கன் 65ல் துணிகளுக்கு சாயம் ஏற்றப் பயன்படும் சூடான் டை, மெட்டானில் எல்லோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதுவே குடல் புற்றுநோய், சிறுநீராகக் கோளாறு, மரபணு கோளாறுகளை ஏற்படுத்துகின்றனவாம். அதேபோல் உணவில் சிவப்பு நிறத்தை கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த செயற்கை நிறங்களை இனிப்புகளில் மட்டுமே சேர்க்கவேண்டும். காரவகைகளில் சேர்க்க அனுமதி கிடையாது.
மக்களின் மனதில் உணவைவிட உணவின் நிறம்தான் பளிச்சென்று பதிந்து உள்ளது. சிக்கன் 65 என்றால் சிவப்பு நிறமாக இருக்கவேண்டும் என்றும், அப்படி இருந்தால் மட்டுமே சிக்கன் 65 என்றும் நினைக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டே வியாபாரிகளம் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.
சிறுவர்களுக்கு ஆபத்து
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.
இதேபோல் ரசாயனம் கலந்து பதப்படுத்தப்பட்டுள்ள பன்றி இறைச்சி, கோழிக்கறி போன்றவைகளை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கிரில்டு சிக்கன் சாப்பிடுவதும் ஆபத்து என்று கூறி சிக்கன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.
Friday, February 24, 2012
நான் யாரையும் காதலிக்கல.....
Monday, February 20, 2012
வாழ்க்கை ஒரு பெரிய வட்டம்...
வாழ்க்கை ஒரு பெரிய வட்டம்
Sunday, February 19, 2012
கவனச் சிதறல்களுக்கு காரணமாகும் ரிங்டோன்கள்
ரிப்போர்ட் - கவனச் சிதறல்களுக்கு காரணமாகும் ரிங்டோன்கள்
இதுதொடர்பாக அவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். சில மாணவர்களை வைத்து பரிசோதனை செய்தனர். மாணவர்களை குறிப்பிட்ட பாடம் தொடர்பாக தேர்வு எழுத வைத்து இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. 30 நொடிகள் ரிங்டோன் கேட்ட பிறகு தேர்வு எழுத வைத்து சோதனை நடத்தப்பட்டது. இதில், அவர்கள் சாதாரணமாக தேர்வு எழுதியதைவிட ரிங்டோன் கேட்டபிறகு தேர்வு எழுதியதில் பல குளறுபடிகள் இருந்தன. தெளிவாக எழுதவும் இல்லை.
முதலில் எழுதியதில் உள்ள தெளிவைவிட 25% சதவிகிதம் குறைவாக இருப்பதை காட்டி இருக்கிறது, இந்த ஆய்வு. இதன் மூலம் ரிங்டோன்களால் ஏற்படும் கவண குறைவு மிக தெளிவாக எடுத்து காட்டப்பட்டுள்ளதாக ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ரிங்டோன்களை தவிர்த்து சைலன்ட் மோடில் மொபைலை வைத்து இருப்பது கூட நல்லது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். கவனத்தை குறைக்கும் இது போன்ற விஷயங்களில் இருந்து தள்ளி இருப்பது அவசியமாகிறது.
Saturday, February 18, 2012
நேற்று (17-2) 5 படங்கள் வெளியானது
யுவராஜ்க்கு அமெரிக்காவில் சிகிச்சை...