வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, October 2, 2012

தமிழுக்கு வருகிறார் தெலுங்கு பிசினஸ்மேன்...!


மகேஷ்பாபு, காஜல் அகர்வால் நடித்து தெலுங்கில் ஹிட் அடித்த படம் பிசினஸ்மேன். இப்போது அதே பெயரில் தமிழில் வெளிவருகிறது. பூரி.ஜெகன்நாத் இயக்கி உள்ளார். 
வெளிநாட்டில் சம்பாதித்து ஆந்திராவில் செட்டிலாகும் குடும்பத்தின் சொத்துக்களை ஏமாற்றி பறித்து குடும்பத்தையே அழிக்கிறார் எம்.எல்.ஏ பிரகாஷ்ராஜ்.


 வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் அந்த குடும்பத்தின் செல்ல மகன் மகேஷ்பாபு இதைக் கேள்விப்பட்டு இந்தியாவுக்கு வருகிறார். அப்புறம் என்ன தெலுங்கு படங்கள் பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? ஒரே அடிதடி, கும்மாங்குத்து ரெண்டு ரீலுக்கு ஒரு சாங் என படம் களைகட்டும். கிளைமாக்சில் வில்லன் தோற்க ஹீரோ ஜெயிக்க சுபம்.
 தமிழ் பதிப்புக்கான பாடல்களை நா.முத்துகுமாரும் வசனத்தை கண்ணனும் எழுதி உள்ளனர். அடுத்த மாதம் ரிலீசாகிறது.

தமிழ்ல பிசினஸ் ஆகுமான்னு ரிலீசுக்கு பிறகுதான் தெரியும்...

ஜில்லென்ற ஐஸ் கட்டிகளை தலையில் வைத்தது போல் சிலிர்த்து நிற்கிறார்கள் இளவட்ட ஹீரோக்கள்....


மவுசு குறையாத நயன்தாரா....!




சிம்பு, பிரபுதேவா என்ற இரண்டு நடிகர்களை காதலித்து பின்னர் பிரிந்த போதிலும், கோலிவுட்டில் நயன்தாராவுக்கு இருந்த அதே பழைய மவுசு இன்னும் அப்படியேத்தான் உள்ளது. அவருடன் நடிக்க வேண்டுமென்றால் ஜில்லென்ற ஐஸ் கட்டிகளை தலையில் வைத்தது போல் சிலிர்த்து நிற்கிறார்கள் இளவட்ட ஹீரோக்கள்.


அதோடு காதும் காதும் வைத்தது போல் அவரது படக்கூலி எகிறுவது போல், ஏற்கனவே அவருடன் நடித்த மேல்தட்டு ஹீரோக்களும் மீண்டும் அவருடன் நடிக்கும் ஆவலில் சிபாரிசுகள் செய்து வருகின்றன. 
இந்த விசயத்தில் ஆர்யா வெளிப்படையாகவே நயனுக்கு சிபாரிசு செய்ய, மற்ற நடிகர்களோ மூடி மறைத்து அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை தங்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களின் காதில் கிசுகிசுத்து வருகிறார்கள். இதை தெரிந்து கொண்ட நயன்தாரா, சினிமாவில் தனக்கு இன்னும் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை அறிந்து, தனது இளமையை மினுமினுப்பாக வைத்திருக்க, மாதம் ஒரு முறை கேரளா சென்று ஆயுர்வேத மசாஜ்களை கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

Tuesday, April 3, 2012

பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?



பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?
 
நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.
எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது 
மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்
ஏமாத்திக்கொண்டு என்று...

ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.
அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.

மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார்.
டிக்கட் குடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால்
அப்போதுதான் ஆரம்பிக்கிறது..அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து
சிறிது நேரம் நிற்கும் போது.....

பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார்.
சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார்.

தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார்.
அன்றைய தினம் எந்த பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால்
அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். 

அப்படி யாருடைய விசேஷ
நாளும் இல்லை என்றால் பயணியில் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ
அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது இவர்
பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக......
ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைகைதிகளுக்கு பாடம் நடத்துகிறார். 

ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார்.
போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.
இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அரசியல இதெல்லாம் சாதரணமப்பா



ஒரு குடும்பம் பகுத்தறிவை அடகுவைத்து ஆட்சி நடத்தியது .. இன்னொரு குடும்பம் மதபோதகத்தை வைத்து பணம் பார்க்கிறது.

மக்களின் அதித நம்பிக்கை மூடநம்பிக்கையாக மாறும் பொது இத்தகைய ஊழல் பேர்வழிகள் உருவாகிக்கொண்டு தான் இருப்பார்கள்.






ஆத்திகமோ நாத்திகமோ .... விழிப்புணர்வு மிக முக்கியம் மக்களே...

பரீட்சைய விட இவங்களோட பேட்டிங் பவுலிங் பெருசாப் போச்சே( ஐபிஎல் 5 )

கொல்கத்தாவில் குழாய் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி....


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது, 90 டெசிபலுக்கு மிகாமல் ஒலி பெருக்கியை பயன்படுத்தி கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


மேற்கு வங்காளத்தில் அரசு பொதுத் தேர்வுகள் துவங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், தேர்வு முடியும் வரையிலும், மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் ஒலி பெருக்கி மற்றும் மைக்ரோபோன்கள் பயன்படுத்த மேற்கு வங்காள மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது.


இந்த நிலையில் இத்தடை உத்தரவை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிபதிகள் பி.கே.ரே, தீபன்கர் துத்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.


விசாரணை முடிவில் ஐபிஎல் போட்டிகளின் போது, கொல்கத்தா நைட் ரைடர் அணியினர் 90 டெசிபல் அளவுக்கு மிகாமல் ஒலி பெருக்கியை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.


பரீட்சைய விட இவங்களோட பேட்டிங் பவுலிங் பெருசாப் போச்சே...

Wednesday, March 7, 2012

சிக்கன் 65 சாப்பிட விருப்பமா?



சிவப்பு
நிறத்தில் மொறு மொறு என்று பார்த்தாலே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் உணவு சிக்கன் 65. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பிரபலமடைந்து வரும் இந்த உணவு கோழிக் கறியை வறுத்து செய்யப்படுகிறது. சிக்கன் 65 கண்ணைக் கவரும் விதத்தில் கலராக தெரியவேண்டும் என்பதற்காக சேர்க்கப்படும் பொடியில் உள்ள ரசாயனம் மனித உடலுக்கும், குடலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

சிக்கன் 65 அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரக கோளாறுகள், மரபணு பாதிப்புகளும் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் ரசாயனம் கலந்த மாமிச உணவுகளை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செயற்கை நிறங்கள்

உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அணுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எட்டு வகையான நிறங்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி உண்டு. ஆனால் இதை யாரும் கடை பிடிப்பதில்லை.

அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும் என்று பிரபல குடல்நோய் நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.

கழுத்துக் கழலை நோய்

சிக்கன் 65ல் துணிகளுக்கு சாயம் ஏற்றப் பயன்படும் சூடான் டை, மெட்டானில் எல்லோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதுவே குடல் புற்றுநோய், சிறுநீராகக் கோளாறு, மரபணு கோளாறுகளை ஏற்படுத்துகின்றனவாம். அதேபோல் உணவில் சிவப்பு நிறத்தை கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த செயற்கை நிறங்களை இனிப்புகளில் மட்டுமே சேர்க்கவேண்டும். காரவகைகளில் சேர்க்க அனுமதி கிடையாது.

மக்களின் மனதில் உணவைவிட உணவின் நிறம்தான் பளிச்சென்று பதிந்து உள்ளது. சிக்கன் 65 என்றால் சிவப்பு நிறமாக இருக்கவேண்டும் என்றும், அப்படி இருந்தால் மட்டுமே சிக்கன் 65 என்றும் நினைக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டே வியாபாரிகளம் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிறுவர்களுக்கு ஆபத்து

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம். எனவே இதுபோன்ற ரசாயனம் கலந்த உணவுகளை சிறுவர்கள் கண்ணில் கூட காட்டக்கூடாது என்று எச்சரித்துள்ளனர் மருத்துவர்கள்.

இதேபோல் ரசாயனம் கலந்து பதப்படுத்தப்பட்டுள்ள பன்றி இறைச்சி, கோழிக்கறி போன்றவைகளை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பதாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கிரில்டு சிக்கன் சாப்பிடுவதும் ஆபத்து என்று கூறி சிக்கன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.

Friday, February 24, 2012

நான் யாரையும் காதலிக்கல.....

மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையை நான் காதலிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நான் யாரையும் காதலிக்கும் நிலையிலும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை பாவனா.


சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் பாவனா. ஒரு ரவுண்ட் வந்த பிறகு, தெலுங்குக்குப் போய்விட்டார். அங்கு கொஞ்ச காலம் பரபரப்பாக நடித்தார். இப்போது மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் மலையாள நடிகரும் கிரிக்கெட் வீரருமான ராஜீவ் பிள்ளையை அவர் காதலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பாவனா மலையாள நடிகர் அணிக்கு தூதுவராக பணியாற்றினார். அந்த அணியில் ராஜீவ் பிள்ளை முன்னணி வீரராக இருந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக சொல்கிறார்கள்.

ஆனால் இதை மறுத்துள்ளார் பாவனா. "ராஜீவ்பிள்ளையும் நானும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில்தான் சந்தித்தோம். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவரை நான் காதலிக்கவில்லை. இந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.

ராஜீவ் பிள்ளையும் இந்த செய்திகளை மறுத்துள்ளார்.

எவ்வளவு வேகமா மறுக்கிறாங்களோ அந்தளவுக்கு தீவிர காதல் இருக்கு என்று சினிமா டிக்ஷனரி சொல்கிறது... பார்க்கலாம்!

Monday, February 20, 2012

வாழ்க்கை ஒரு பெரிய வட்டம்...

வாழ்க்கை ஒரு பெரிய வட்டம்



நயனின் முன்னாள் காதலன் சிம்பு, தனது புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவருடன் பேச்சு நடத்தி வருகிறார் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே நயன்தாராவை தனது ஒஸ்தி படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார் சிம்பு. அப்போது நடிக்க மறுத்துவிட்டார் நயன். ஆனால் இப்போது, பிரபு தேவாவை விட்டு முற்றாக விலகிவிட்ட நிலையில், அனைத்து வித வாய்ப்புகளையும் பரிசீலிக்க ஆரம்பித்துவிட்டார்.

இப்போது அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்ட நயன், அடுத்து சிம்புவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் ஒரு முக்கிய இயக்குநர்.

நயன்-சிம்பு மீண்டும் ஜோடி என்ற செய்தியால் கிளம்பவிருக்கும் பரபரப்பு நல்ல வசூலைக் கொட்டும்.

Sunday, February 19, 2012

கவனச் சிதறல்களுக்கு காரணமாகும் ரிங்டோன்கள்

ரிப்போர்ட் - கவனச் சிதறல்களுக்கு காரணமாகும் ரிங்டோன்கள்

மொபைல் ரிங்டோன்கள் கவனச் சிதறல்களுக்கு காரணமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. மொபைல்களில் பிடித்த பாடல்களை ரிங்டோனாக வைப்பது அனைவரும் அறிந்த விஷயம். இன்றைய நவநாகரீக உலகில் இது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. ஆனால் இந்த ரிங்டோன் கவனக் குறைவை ஏற்படுத்துவதாக அமெரிக்காவிலுள்ள
வாஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். சில மாணவர்களை வைத்து பரிசோதனை செய்தனர். மாணவர்களை குறிப்பிட்ட பாடம் தொடர்பாக தேர்வு எழுத வைத்து இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. 30 நொடிகள் ரிங்டோன் கேட்ட பிறகு தேர்வு எழுத வைத்து சோதனை நடத்தப்பட்டது. இதில், அவர்கள் சாதாரணமாக தேர்வு எழுதியதைவிட ரிங்டோன் கேட்டபிறகு தேர்வு எழுதியதில் பல குளறுபடிகள் இருந்தன. தெளிவாக எழுதவும் இல்லை.

முதலில் எழுதியதில் உள்ள தெளிவைவிட 25% சதவிகிதம் குறைவாக இருப்பதை காட்டி இருக்கிறது, இந்த ஆய்வு. இதன் மூலம் ரிங்டோன்களால் ஏற்படும் கவண குறைவு மிக தெளிவாக எடுத்து காட்டப்பட்டுள்ளதாக ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ரிங்டோன்களை தவிர்த்து சைலன்ட் மோடில் மொபைலை வைத்து இருப்பது கூட நல்லது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். கவனத்தை குறைக்கும் இது போன்ற விஷயங்களில் இருந்து தள்ளி இருப்பது அவசியமாகிறது.

Saturday, February 18, 2012

நேற்று (17-2) 5 படங்கள் வெளியானது

இந்த வெள்ளிக்கிழமையும் கோலிவுட் ரொம்ப பிஸி. காரணம் 5 புதிய படங்கள். போனவாரம் 6 படங்கள் வெளியாகின. ஒவ்வொன்றும் ஒரு விதமான படம். இதில் 'தோனி'க்கு நல்ல பெயர். இந்த வாரம் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'உடும்பன்', 'காட்டுப்புலி' மற்றும் 'அம்புலி' என 5 படங்கள். இவற்றில் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அதர்வா-அமலா பால் நடித்துள்ள இந்தப் படம் ஒரு வித்தியாசமான த்ரில்லர் என்கிறார்கள்.
ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்து இயக்கியுள்ளார்.
'காதலில் சொதப்புவது எப்படி' படம் தமிழ் - தெலுங்கில் வெளியாகிறது. நடிகர் சித்தார்த் இந்தப் படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இதிலும் ஹீரோயின் அமலா பால்தான். சில நெருக்கடிகளைத் தாண்டி 'உடும்பன்' படம் வெளியாகிறது. உடும்பை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். அர்ஜுன் நடிப்பில் வரும் 'காட்டுப் புலி'யும் ஆக்ஷன் த்ரில்லர்தான்.
'அம்புலி' ஒரு 3 டி படம். மனோஜ் நைட் ஷியாமளனின் வில்லேஜ் மாதிரி. இவற்றோடு, கௌதம் மேனனின் 'ஏக் தீவானா தா' (விண்ணைத்தாண்டி வருவாயா)வும் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 11 அரங்குகளில் இந்தப் படம் ரிலீஸ்! ஆங்கிலப்படம் 'தி வுமன் இன் பிளாக்', ரவி தேஜாவின் தெலுங்குப் படம் 'நிப்பு' போன்றவையும் ரிலீஸ்.
எம்புட்டு மழை கொட்டுனாலும் சிப்பிக்குள் விழும் துளி எதுன்னுதான் பார்த்திடுவோம்.....

யுவராஜ்க்கு அமெரிக்காவில் சிகிச்சை...


முதல் கீமோதெரபி சிகிச்சைப் பிறகு புற்றுநோய்க் கட்டி பெருமளவில் குணமடைந்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் புற்றுநோய்க்காக அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வரும் அவர், டுவிட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை கூறியிருப்பது:

டாக்டர் லாரன்ஸிடம் இருந்து வியாழக்கிழமை நல்ல செய்தி கிடைத்தது. என்னுடைய ஸ்கேன் அறிக்கையை பார்த்துவிட்டு புற்றுநோய்க்கட்டி பெருமளவில் குறைந்துவிட்டதாகத் தெரிவித்தார். 2-வது கட்ட கீமோதெரபி சிகிச்சை தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அமெரிக்க சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் அனுப்பிய செய்தி, தனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 362 ரன்களைக் குவித்த யுவராஜ் சிங், 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். 2000-ம் ஆண்டில் அறிமுகமான அவர், இதுவரை 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,051 ரன்கள் குவித்துள்ளார்.