வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, October 19, 2011

பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்கிறார் டோணி!



பிரகாஷ் ராஜின் புதிய படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோணி நடிக்கிறார்.




இந்தப் படத்துக்குப் பெயரே டோணி என்றுதான் வைக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தை இயக்குபவரும் பிரகாஷ் ராஜ்தான். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது:குழந்தைகள் மனநிலையை மையப்படுத்தி டோனி படம் தயாராகிறது. தேர்வுக்காக குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்கின்றனர்.



பெற்றோரும் அவர்களை அதிக மதிப்பெண் பெற நிர்ப்பந்திக்கின்றனர். குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளை வெளிக் கொண்டுவரும் கல்விமுறை நம்மிடம் இல்லை. குழந்தைகளை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது. சமூகத்துக்கு இப்படம் சில கருத்துக்களை சொல்லும். ஆகாஷ், ராதிகாஆப்தே, தலைவாசல் விஜய், நாசர், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கின்றனர்.



கே.பி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இளையராஜா இசை அமைக்கிறார்.

பிரபுதேவா எனக்கு நெருங்கிய நண்பர்.

அவர் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார்.

ஒரு பாடல் காட்சியில் வருகிறார்.

இந்த வருடம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.



இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் டோணியும் கவுரவ தோற்றத்தில் தோன்றப் போகிறாராம். இதுகுறித்து பிரகாஷ்ராஜிடம் கேட்டபோது, படத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அதை பின்னர் சொல்கிறேன் என்று கூறினார்.

Monday, October 17, 2011

சகுனி - குறித்து கார்த்தியின் லேட்டஸ்ட் பேட்டி


‘சிறுத்தை’ படத்திற்கு பிறகு கார்த்தி மும்முரமாக நடித்து வரும் படம் ‘சகுனி’. 
அறிமுக இயக்குனர் சங்கர் தயாளின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பூர்ணிதா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படம் குறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது; “பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என எல்லா படங்களுமே வெவ்வேறு களங்களில் உருவானது. இந்த படங்களிலிருந்து மாறுபட்ட அரசியல் கதையாக அமைந்திருக்கிறது ‘சகுனி’. எல்லோரிடமும் திட்டு வாங்குகின்ற ஒரு கதாபாத்திரம்.

ராதிகா, நாசர் போன்ற சீனியர் ஆர்ட்டிஸ்டுகளுடன் நடித்திருக்கிறேன். சிறுத்தையில் சந்தானத்துடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தது வரவேற்பு பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வரவேற்பு கிடைக்கும்.”