வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, August 22, 2011

விஜயகாந்த் கூட்டணியை யாராலும் பிரிக்கவே முடியாது...


அதிமுக - தேமுதிக கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்று திருப்பரங்குன்றம் 
எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ராஜா தெரிவித்துள்ளார். 


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெள்ளப்பாறைப்பட்டியில் புதிய பேருந்து வழித்தட துவக்க விழா நடந்தது. அதில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ராஜா சிறப்பு அழைப்பாரக கலந்து கொண்டு புதிய வழித்தடத்தை துவக்கி வைத்தார்.

அந்த விழாவில் அவர் பேசியதாவது,
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. எப்படி சட்டசபை தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணியை வெற்றி பெறச் செய்தீர்களோ அதே போல் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதிமுக- தேமுதிக கூட்டணியை பிரிக்க முயற்சி நடந்து வருகிறது. 
அது வீண் முயற்சி. முதல்வர் ஜெயலலிதா, 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணியை யாராலும் பிரி்க்கவே முடியாது என்றார். 


இந்த வழித்தடம் வெள்ளப்பாறைப்பட்டியிலிருந்து நாகமலை புதுக்கோட்டை, சிம்மக்கல் வழியாக மதுரை மாட்டுத்தாவணிக்கு செல்லும்.

0 comments:

Post a Comment