வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, July 18, 2011

இன்பத்தில் மூழ்கினார் நித்தியானந்தா

ஆனந்த தாண்டவம் ஆடினார் ரஞ்சிதா – இன்பத்தில் மூழ்கினார் நித்தியானந்தா

 

பெங்களுரிலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதா துள்ளிக் குதித்து நடனமாடியதை நித்தியானந்தா பார்த்து இரசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள், பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இவ்வருடம் பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். பட்டுப்புடவை அணிந்திருந்த ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது, ரஞ்சிதாவின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் வழங்கிய நித்தியானந்தா, பின்னர் பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து அவருக்கு பாத பூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.
பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்த நித்தியானந்தா முன்பு நடிகை ரஞ்சிதா திடீரென எழுந்து துள்ளிக் குதித்த படி ஆனந்த நடனம் ஆடினார். அவரைப் போல் ஏராளமான பெண்களும் உற்சாக நடனம் ஆடினர். இதை நித்தியானந்தா சிம்மாசனத்தில் அமர்ந்தபடி இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு மனிதனிடமும் குண்டலினி சக்தி உள்ளது எனவும் அதை உயிர்ப்பிப்பதற்காக இந்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் குண்டலினி யோகாசன பயிற்சி பற்றி நித்தியானந்தா விளக்கம் கொடுத்துள்ளார்.

1 comment:

  1. அந்த டான்ச பாத்தா ஏதோ ஷாக் அடிச்சு தூக்கி போட்ட மாதிரி இருக்கு.

    ReplyDelete