வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Wednesday, June 22, 2011

எல்லை கடந்த கிளாமர் காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டேன் – தமன்னா


கிளாமர் காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டேன் – தமன்னா





எதற்கும் ஒரு எல்லை உண்டு. கிளாமருக்கும் எல்லை உண்டு. அதைத் தாண்டி நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்கிறார் தமன்னா.
சில வாரங்களுக்கு முன்பு வரை தமன்னாதான் தமிழ் சினிமாவின் ஒய்யார நாயகியாக இருந்தார். அத்தனை ஹீரோக்களும் தமன்னாவுடன் ஜோடி போட அலை மோதிய காலம் அது.
ஆனால் இன்று தமன்னாவை பூதக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டியுள்ளது. காரணம், இப்போது அவர் தமிழில் அவ்வளவாக நடிப்பதில்லை. மாறாக தெலுங்கில் பிசியாகி விட்டார்.
இருப்பினும் தற்போது ஹரி இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக வேங்கை படத்தில் நடித்து வருகிறார் தமன்னா.
இதில் சாதாரண கல்லூரி மாணவியாக மகா எளிமையாக நடிக்கிறாராம் தமன்னா. ஏன் கிளாமர் பக்கம் போகவில்லையா என்று கேட்டால், எனக்கு கிளாமர் நடிப்பு, சாதா நடிப்பு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. நல்ல கதையா என்றுதான் பார்ப்பேன். கதை பிடித்திருந்தால் நடிப்பேன்.அது கிளாமருடன் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும்.
அதேசமயம், கிளாமர் காட்டுவதிலும் ஒரு எல்லை உண்டு. எல்லை கடந்தால் அது விரசமாகி விடும். அதற்கு எனது ஓட்டு எப்போதுமே கிடையாது. அதற்காக கிளாமரே கூடாது என்றெல்லாம் இல்லை.
இப்போது கூட பத்ரிநாத் என்ற படத்தில் கிளாமராகத்தான் நடித்திருக்கிறேன். அதேபோல 100பர்சன்ட் லவ் என்ற படத்திலும் கிளாமர் காட்டியுள்ளேன். எல்லாம் எல்லை கடக்காத அழகான கிளாமர்தான் என்று நீண்ட விளக்கமளித்து பெருமூச்சு விட்டார்.
சரி தமிழ் என்னாச்சு என்று கேட்டால், மறுபடியும் நீளமாக பேசினார் தமன்னா. அப்படியெல்லாம் கிடையாது. நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதை எனக்குப் பிடித்தாற் போல இல்லாததால் ஒப்புக் கொள்ளவில்லை. மற்றபடி தமிழை நான் புறக்கணிக்கவில்லை. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் மறுபடியும் நடிப்பேன் என்று கூறி நிறுத்தினார்.
கார்த்தி கல்யாணத்திற்குப் போவீங்களா தமன்னா…?

0 comments:

Post a Comment