வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, May 14, 2011

அண்னே! நான் தமாஷா பேசுனது எல்லாம் நீங்க உன்மைனு நம்பீட்டிங்க...ஹையோ ஹையோ!!!!!!! - வடிவேலு அந்தர் பல்டி

Vadivelu 
தேர்தல் முடிவுகள் குறித்து இன்று கருத்து சொல்லப் போவதாகக் கூறியுள்ளார் வடிவேலு. அவரது பதில் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில் ஒரு சின்ன எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

தேர்தலின்போது, அதிமுக ஒரு வார்த்தை கூட விமர்சிக்காத வடிவேலு, அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிக மற்றும் அதன் தலைவர் விஜயகாந்தை தாறுமாறாக விமர்சித்தார்.

கூடவே, அதிமுகவுக்கு வாக்களித்த ரஜினியையும் சகட்டுமேனிக்கு பேசி வெறுப்பை சம்பாதித்து விட்டார். இந்த நிலையில் அதிமுக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுவிட்டது.

இதுகுறித்து வடிவேலுவிடம் கருத்து கேட்ட போது, "தேர்தல் பிரசாரத்தின்போது நான் விஜயகாந்தை விமர்சித்தேன். அதற்காக, சென்னையில் என் வீட்டை அவருடைய கட்சியினர் நேற்று தாக்க முயன்றுள்ளனர்.

என்னைப்பற்றி ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். அவர்களை போலீசார் அடித்து விரட்டியிருக்கிறார்கள். தேர்தல் முடிவு பற்றிய என் கருத்தை நாளை (இன்று) தெரிவிக்கிறேன்,'' என்றார்.


0 comments:

Post a Comment