வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Tuesday, April 12, 2011

இந்த வார ஸ்பெஷல்: பிரமாண்ட பொன்னர் சங்கர்-திரை விமர்சனம்!

கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ள பொன்னர் சங்கர் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.

கருணாநிதியின் கதை வசனத்தில் தயாரான படங்களில் முற்றிலும் வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் வரும் படம் பொன்னர் சங்கர். தரத்தில் அனைவரையுமே விழி விரிய வைத்துள்ள படமும் கூட!

கொங்கு மண்டலத்தில் பிரபலமான அண்ணன்மார் சுவாமி கதைதான் இந்த பொன்னர் சங்கர். பிரசாந்த் இருவேடங்களில் நடிக்க, தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ளார்.

இளையராஜா இசையில், பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சினேகா, ராஜ்கிரண், நெப்போலியன், குஷ்பு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே உள்ளது.

இந்தப் படத்தை தேர்தலுக்கு முன்பே வெளியிடுவதில் தீவிரமாக இருந்த இயக்குநர் தியாகராஜன், திட்டமிட்ட படி போஸ்ட் புரொடக்ளஷன் பணிகளை முடித்துவிட்டார். பின்னணி இசைச் சேர்ப்பும் முடிந்துவிட்டதால், தேர்தலுக்கு நான்கு தினங்களுக்கு முன்பே இந்தப் படம் வெளியாகிறது.

2.40 மணி நேரம் ஓடும் பொன்னர் சங்கரை பார்த்த அனைவருமே, மனம் திறந்து பாராட்டியிருப்பது இந்தப் படத்துக்கு பலம்.

பிரசாந்த் தனது கேரியருக்காக பெரிதும் நம்பியிருக்கும் படம் இந்த பொன்னர் சங்கர்தான்.

0 comments:

Post a Comment