வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Tuesday, March 22, 2011

பிரம்மச்சாரி அறையில் இருக்க வேண்டிய 8 விசயங்கள்.......... (பெண்களுக்குப் பிடித்த)


என் அருமை கல்யாணமாகாத நண்பர்களே!!ஃபிகர் மடக்குவது எப்படி, கடலை போடுவது
எப்படின்னு ஏகப்பட்ட மேட்டர் நம்ம மக்கள் பிளாகில் போடுறாங்க! 

வெளிய போகும்போடு செம ஸ்டைலாப் போவீங்க! நாங்க சொல்லித்தர வேண்டியதில்லை! 
நான் நீங்க வீட்டிலோ, ரூமிலோ இருக்கும்போது ?ரூம் பத்தி சொல்ல வேண்டியது இல்லை!! 
நான் சொல்லப்போறது ரொம்பத்தேவையான விசயம்னு தலைப்பைப் பார்த்தவுடனே தெரிந்து
இருக்கும்! 
திடீர்னு நீங்க விரும்புகிற ஃபிகர் எப்பவோ நீங்க சொன்ன அட்ரெஸ்ஸ வச்சு ” சும்மா இந்தப் பக்கமா வந்தேன் , அப்படியே உங்க ஞாபகம் வந்ததுன்னு “உள்ளே நுழைந்தால்!!.........” இப்படியெல்லாம் சந்தர்ப்பம் வருமா?ன்னு”
கேக்கக்கூடாது! 


ஃபிகர் எல்லாம் எந்த நேரத்தில் எங்கே நுழைவார்கள் என்று தெரியாது!! 
””எப்ப வருவாங்கன்னு  தெரியாது! நமக்கு மச்சம் இருந்தா வரவேண்டிய நேரத்தில்
கரெக்டா வந்து விடுவார்கள்!”” 
அப்படி உள்ளே நுழைந்து விட்டால்? நடக்கும் கூத்தே தனிதான்! 
சரி!! நாம் அறையை எப்படி வைத்து இருக்க வேண்டும் என்று பார்ப்போம்!! 


1. அறையில் எங்காவது ஒரு இடத்தில் நீங்கள் செய்த மரத்தால், இல்லை
 ஐஸ் குச்சி ,இல்லை மூங்கில் குச்சி வைத்து செய்த பொருளை மாட்டி வைக்கவும்!! 
(அட்லீஸ்ட் விளக்குமாத்துக் குச்சி!!!)இல்லையா நீங்க செய்தா எப்படி இருக்குமோ?...
அதுக்குத் தோதா ஒன்னை வாங்கி வைங்க. எப்பவோ 12த் படிக்கும்போது செய்தது!ன்னு
அள்ளி விடுங்க! 
அதை வச்சு ஒரு ஜோக்கூட அடிக்கலாம். ”படித்து முடித்து வேலை கிடைக்கலைன்னா கைவசம் தொழில் இருக்கு”.என்பது போல!! நீங்க செல்ஃப் ஜோக் அடிச்சா ரசிப்பாங்க!மறந்து போய் அவங்களை வைத்து ஜோக் அடிச்சீங்க! சாப்டர் குளோஸ்!!! 



2.இருவர் விளையாடும் வீடியோ கேம்! வீடியோ கேம் குழந்தைங்க விளையாடுவதுன்னு
நினைச்சா அதை மாத்திக்கங்க! இரண்டு பேர் சேர்ந்து ஆடி அவங்களையும் ஜெயிக்கவிடுங்க! அப்பத்தான் நீங்க ஜெயிக்கலாம்!! என்ன புரிந்து இருக்குமே! 



3.நல்ல சமையல் அடுப்பு அவசியம் இருக்கணும்!! கன்னங்கரேல்னு ஒரு ஸ்டவ்வைப்
பத்தவச்சீங்க ..நிலைமை மோசம்தான்! ரெண்டு மூனு அயிட்டம் செய்ய்த்தெரிந்து வச்சுக்கோங்க!  திடீர்ன்னு பிரெட் டோஸ்ட் மாதிரி ஏதாவது செய்து அசத்துங்க!! அப்புறம் என்ன? உங்க ராஜ்ஜியந்தான்!! 


4.ஜிம்மிக்ஸ் வேலை செய்த உங்கள் போட்டோ ஆல்பம்( ஒரிஜினல் நாட் அட்வைஸ்ட்), 
டூர் ஆல்பம்(அதுல மேக்ஸிமம் லாங்க் ஷாட் தானே இருக்கும்!!!உங்கள் குளோசப் கூடவே
கூடாது!) ஆகியவற்றை டேபிளின் மேல் பார்வையில் படும்படி வைக்கவும்!! அவற்றின்
மூலம் ஏகப்பட்ட விசயம் பேசலாமே!! 



5.சாக்கலேட் மில்க், பெப்ஸி,கோலா ஆகியவற்றை கொஞ்சம் வைத்திருங்கள்! அந்த
நேரத்துக்கு ஓடி அலையக்கூடாது!! என்ன சரிதானே!!பீ கூல்! 
ரம் ,பீர்ன்னு வெளிய எடுத்திடாதீங்க!! அந்த பாட்டில்கள் கண்ணில் படாமல் இருக்கட்டும்! 



6.நீங்கள் சென்ற இடங்களின் போட்டோக்களை பெரிதுபடுத்தி காலேஜ் நோடீஸ்போர்ட் போல
கொலாஜ் பாணியில் சுவற்றில் ஒட்டி அலங்கரித்து வைங்க! மொத்தமும் பார்த்தா ஒங்க
டூர் மொத்தமும் ஞாபகம் வரணும்!!போன இடம் வந்த இடம் என்று ஏகப்பட்ட விசயங்கள்
பேசலாம், கடலை இழுத்துக்கொண்டே போகும்!! 



7.பெண்களுக்கு செல்லப்பிராணிகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்!!!  நாய்,பூனை போல.
நாய் பூனை இல்லைன்னா மீன் தொட்டியாவது சின்னதாக வைத்து விடுங்கள்!  இதெல்லாம்
பார்த்தா பெண்கள் உங்களை பொறுப்பானவர் என்று நினைப்பார்களாம்!!! 



8.  எதாவது இசைக்கத்தெரியுமென்றால் நீங்க பாஸ்!! தெரியாதா? இப்போதிலிருந்தே
ஏதாவது ஒரு இசைக்கருவியை எப்படியாவது கற்றுக்கொள்ளுங்கள்!! கிடார் மாதிரி
ஒன்னைக் கண் படும் விதத்தில் வைக்கவும்!! வாசிக்கலைன்னாலும் அதைக்கையிலெடுத்துப் பார்ப்பார்கள் பாருங்க!! அப்புறம் என்ன? அசத்தல்தான்! 
என்ன பேச்சலர்ஸ் ரெடியா? 

இவ்வளவு திறமையும் ஏற்கெனவே இருக்கு பாஸ்ன்னா ஓக்கே!!! 


இல்லைன்னாலும் பரவாயில்லை! ஆரம்பிங்க இப்போதிருந்தே!! 

1 comment:

  1. ஒவ்வொரு பிரம்மச்சாரிக்கும் தெரிய வேண்டிய விஷயம்....
    மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete