வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, February 25, 2011

கைதான ராசாவை நக்கல் அடிக்கும் ட்வீட்டுகள் -ஆனந்த விகடன் வலைபாயுதே



நேற்று ஆ ராசா அரெஸ்ட் நியூஸ் வந்ததும் ட்விட்டர் பக்கம் போனா நம்ம ஆளுங்க தி மு க வை பொளந்து கட்டிட்டு இருந்தாங்க.. அப்போதான் ஒரு ஐடியா தோணுச்சு.. வழக்கமா மொக்கை படத்தை பார்த்து இதுக்கு எத்தனை மார்க் விகடன்ல போடுவாங்கன்னு கேவலமா ஒரு கணிப்பு போடுவமே.. அதே மாதிரி அடுத்த வார விகடன்ல எந்தெந்த ட்வீட் செலக்ட் ஆகும்னு பாக்கலாம்னு  உக்காந்தேன்.


சும்மா சொல்லக்கூடாது.. 3 மணி நேரத்துல நம்மாளுங்க 1438 ட்வீட்  ட்வீட்டீட்டாங்க..அதுல எதெல்லாம் அடுத்த வார விகடன்ல செலக்ட் ஆகும்னு  ஒரு கெஸ் பண்ணி இருக்கேன். வழக்கம் போல இதுவும் சொதப்புனா யாரும் என்னை திட்டக்கூடாது..

Thursday, February 24, 2011

மக்களிடம் மன்னிப்பு கேட்ட  விஜய்



தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலை கண்டித்து நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாகையில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு மீனவர்களுக்கு உதவித் தொகை வழங்கியதுடன், இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை அரசை கண்டிக்காத மாநில, மத்திய அரசுகளை கண்டித்தும் பேசினார்.

முதலில் அவர் பேச ஆரம்பித்தபோது மழை பெய்யத் தொடங்கியதாலும், ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக ஆரவாரம் செய்ததாலும் பேச்சை பாதியிலேயே நிறுத்தி விட்டு ஹோட்டலுக்கு சென்று விட்டார் விஜய். பின்னர் அரை மணி நேரம் கழித்து மீண்டும் மேடைக்கு வந்த விஜய், ரசிகர்கள் மத்தியில் ஆவேசமாக பேசினார்.
முன்னதாக விஜய் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விஜய் ரசிகர்கள், காலையில் இருந்து வாகனங்களில் நாகை வரத் தொடங்கினர்.
இதில் அனைவருமே 15 வயதில் இருந்து 25 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தனர். பஸ்கள், வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோவில் வந்த ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் கூச்சல் போட்டுக் கொண்டு சாலைகளில் ஆர்ப்பரித்து, பொதுமக்களை கலங்கடித்து சென்றனர்.
விஜய் ரசிகர்களின் ஆர்வ மிகுதிக்கு ரோட்டில் நடந்து சென்ற பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவியர்களும் தப்பவில்லை.
ரசிகர்களின் கூச்சலால் பெண்களும், மாணவியர்களும் அலறியடித்து ஓடினர். இச்செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

நமீதாவை வைத்து எந்திரனை ரீமேக்கும் சக்தி சிதம்பரம்!


இந்திய சினிமா வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் தயாராகி, அதிக வசூலைக் குவித்த பெருமைக்குரிய படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன்.
இந்தப் படத்தை அப்படியே ரீமேக் செய்கிறாராம் சக்தி சிதம்பரம். ரீமேக் என்றால்? உட்டாலக்கடி வேலைதான்!
எந்திரனை தமாஷாக எடுக்கப் போகிறாராம். இதில் விஞ்ஞானி மற்றும் ரோபோ வேடத்தில் நடிக்கப் போகிறவர் வேறு யாருமில்லை… சக்தி சிதம்பரமேதானாம்.
ஐஸ்வர்யா ராய் நடித்த சனா வேடத்தை, சக்தி சிதம்பரத்தின் வழக்கமான நாயகி நமீதா ஏற்றுள்ளாராம்.
படம் குறித்த டிஸ்கஷன் ரொம்ப தீவிரமாக போய்க் கொண்டிருக்கிறது.
இந்தப் படம் நிச்சயம் ரஜினி சார் படத்தை கிண்டலடிக்கிற மாதிரி இருக்காது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக மட்டுமே எடுக்கத் திட்டமிட்டுள்ளோம், என்கிறார்கள் சக்தி சிதம்பரம் யூனிட்காரர்கள்!
சரி.. படத்துக்கு தலைப்பு?
பைந்திரன்!!

இன்றைய தமிழகம் !


ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார் – “எதற்க்காக இத்தனை கஷ்ட்டப்படுகிறாய்?”

நான் கேட்டேன் – “கஷ்டப் படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?”

அவர் சிரித்தபடி சொன்னார் – “என்னைப் பார்,

ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கி விடுவேன்.

போரடித்தால் வண்ணத்தொலைக்காட்சியில் திரைப்படம் பார்திடுவேன்.

உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர் சிகிச்சை பெற்றிடுவேன் இராஜமரியாதையுடன் !!”

“உழைக்காமல் எப்படியடா இத்தனையும் முடியும்?”

முதலாமவர் சிரித்தபடி கேட்டார் –

“நான் யார் தெரியுமா??

தமிழ் நாட்டுக் குடிமகன்.”

“என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய்

சமைப்பதற்க்கு எரிவாயுவும் அடுப்பும் இலவசம்.

பொழுதுபோக்கிற்கு வண்ணத்தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்

குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்

எதற்க்காக உழைக்கவேண்டும் ?”

நான் கேட்டேன் – “உன் எதிர் கால சந்ததியின் நிலை என்ன?”

பலமாக சிரித்தபடி உரைத்தார் -

“மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5,000 இலவசம் சிகிச்சையுடன் ..

குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில் ..

படிப்பு சீருடையுடன் உணவும் இலவசம் முட்டையுடன்

பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்..

தேவையென்றால் மிதி வண்டியும் இலவசம்.

பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை ரூபாய் 25,000 இலவசம்

ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் !!”

“தேவையென்றால் மாப்பிள்ளையுடன் செய்தித்தாளில் விளம்பரமும் இலவசம்

மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்

நான் எதற்கு உழைக்க வேண்டும்??”

வியந்து போனேன் நான் !!

என் உயிர் தமிழகமே ! எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?

இலவசம் என்பதற்க்கு இரண்டு பொருள் உண்டு

ஒன்று கையூட்டு , மற்றொன்று யாசகம்

இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?

உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் – இலவசம் நின்று போனால் உன் நிலை என்ன
ஆகும்??

உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய் !!

இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால்,

அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும் வெகு தொலைவில் இல்லை

தமிழா விழித்திடு - உழைத்திடு

இலவசத்தை வெறுத்திடு – அழித்திடு

தமிழகத்தை தரணியில் உயர்த்திடு

நாளைய தமிழகம் நம் கையில்

உடன்பிறப்பே சிந்திப்பாயா?

மனது வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!

–தமிழன்

Saturday, February 19, 2011

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி-2011 அட்டவணை


10வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் வரும் 19ம் தேதி தொடங்குகின்றன.

இந்த மூன்று நாடுகளிலும் நடக்கும் போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கின்றன.

அதன் விவரம்: 
தேதிமோதும் அணிகள்பிரிவுஇடம்நேரம்
பிப் 19வங்கதேசம் Vs இந்தியாபிமிர்பூர் (வங்கதேசம்)பகல் 2 மணி
பிப் 20கென்யா Vs நியூசிலாந்துசென்னைகாலை 9.30 மணி
பிப் 20இலங்கை Vs கனடாஹம்பன்டோட்டா (இலங்கை)பகல் 2.30 மணி
பிப் 21ஆஸ்திரேலியா Vs ஜிம்பாப்வேஅகமதாபாத்பகல் 2.30 மணி
பிப் 22இங்கிலாந்து Vs நெதர்லாந்துபிநாக்பூர்பகல் 2.30 மணி
பிப் 23கென்யா Vs பாகிஸ்தான்ஹம்பன்டோட்டாபகல் 2.30 மணி
பிப் 24தென் ஆப்பிரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ்பிடெல்லிபகல் 2.30 மணி
பிப் 25ஆஸ்திரேலியா Vs நியூசிலாந்துநாக்பூர்காலை 9.30 மணி
பிப் 25வங்கதேசம் Vs அயர்லாந்துபிமிர்பூர்பகல் 2 மணி
பிப் 26இலங்கை Vs பாகிஸ்தான்கொழும்புபகல் 2.30 மணி
பிப் 27இந்தியா Vs இங்கிலாந்துபிபெங்களூர்பிறபகல் 2.30 மணி
பிப் 28கனடா Vs ஜிம்பாப்வேநாக்பூர்காலை 9.30 மணி
பிப் 28நெதர்லாந்து Vs வெஸ்ட் இண்டீஸ்பிடெல்லிபகல் 2.30 மணி
மார்ச் 1இலங்கை Vs கென்யாகொழும்புபகல் 2.30 மணி
மார்ச் 2இங்கிலாந்து Vs அயர்லாந்துபிபெங்களூர்பகல் 2.30 மணி
மார்ச் 3நெதர்லாந்து Vs தென் ஆப்பிரிக்காபிமொகாலிபகல் 2.30 மணி
மார்ச் 3கனடா Vs பாகிஸ்தான்கொழும்புபகல் 2.30 மணி
மார்ச் 4நியூசிலாந்து Vs ஜிம்பாப்வேஅகமதாபாத்காலை 9.30 மணி
மார்ச் 4வங்கதேசம் Vs வெஸ்ட் இண்டீஸ்பிமிர்பூர்பகல் 2 மணி
மார்ச் 5இலங்கை Vs ஆஸ்திரேலியாகொழும்புபகல் 2.30 மணி
மார்ச் 6இங்கிலாந்து Vs தென் ஆப்பிரிக்காபிசென்னைகாலை 9.30 மணி
மார்ச் 6இந்தியா Vs அயர்லாந்துபிபெங்களூர்பகல் 2.30 மணி
மார்ச் 7கனடா Vs கென்யாடெல்லிபகல் 2.30 மணி
மார்ச் 8நியூசிலாந்து Vs பாகிஸ்தான்பல்லிகிலே (இலங்கை)பகல் 2.30 மணி
மார்ச் 9இந்தியா Vs நெதர்லாந்துபிடெல்லிபகல் 2.30 மணி
மார்ச் 10இலங்கை Vs ஜிம்பாப்வேபல்லிகிலேபகல் 2.30 மணி
மார்ச் 11அயர்லாந்து Vs வெஸ்ட் இண்டீஸ்பிமொகாலிகாலை 9.30 மணி
மார்ச் 11வங்கதேசம் Vs இங்கிலாந்துபிசிட்டகாங்பகல் 2.30 மணி
மார்ச் 12இந்தியா Vs தென் ஆப்பிரிக்காபிநாக்பூர்பகல் 2.30 மணி
மார்ச் 13கனடா Vs நியூசிலாந்துமும்பைகாலை 9.30 மணி
மார்ச் 13ஆஸ்திரேலியா Vs கென்யாபெங்களூர்பகல் 2.30 மணி
மார்ச் 14வங்கதேசம் Vs நெதர்லாந்துபிசிட்டகாங்காலை 9 மணி
மார்ச் 14பாகிஸ்தான் Vs ஜிம்பாப்வேபல்லிகிலேபகல் 2.30 மணி
மார்ச் 15அயர்லாந்து Vs தென் ஆப்பிரிக்காபிகொல்கத்தாபகல் 2.30 மணி
மார்ச் 16ஆஸ்திரேலியா Vs கனடாபெங்களூர்பகல் 2.30 மணி
மார்ச் 17இங்கிலாந்து Vs வெஸ்ட் இண்டீஸ்பிசென்னைபகல் 2.30 மணி
மார்ச் 18அயர்லாந்து Vs நெதர்லாந்துபிகொல்கத்தாகாலை 9.30 மணி
மார்ச் 18நியூசிலாந்து Vs இலங்கைமும்பைபகல் 2.30 மணி
மார்ச் 19வங்கதேசம் Vs தென் ஆப்பிரிக்காபிமிர்பூர்காலை 9 மணி
மார்ச் 19ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான்கொழும்புபகல் 2.30 மணி
மார்ச் 20கென்யா Vs ஜிம்பாப்வேகொல்கத்தாகாலை 9.30 மணி
மார்ச் 20இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்பிசென்னைபகல் 2.30 மணி

கால் இறுதிப் போட்டிகள்:

1. மார்ச் 23: முதல் கால் இறுதிப் போட்டி (ஏ1 Vs பி4)- மிர்பூர்- பகல் 2 மணி

2. மார்ச் 24: 2வது கால் இறுதி போட்டி (ஏ2 Vs பி3)- அகமதாபாத்- பகல் 2.30 மணி

3. மார்ச் 25: 3வது கால் இறுதி போட்டி (ஏ3 Vs பி2)- மிர்பூர்- பகல் 2 மணி

4. மார்ச் 26 கால் இறுதி (ஏ4 பி1) கொழும்பு பகல் 2.30 மணி

அரையிறுதிப் போட்டிகள்:

1. மார்ச் 29: கொழும்பு- பகல் 2.30 மணி

2. மார்ச் 30: மொகாலி- பகல் 2.30 மணி

இறுதிப்போட்டி:

ஏப்ரல் 2-மும்பை- பகல் 2.30 மணி

தேர்தல் 2011… ரஜினி ‘கிரேட் எஸ்கேப்’!


1994-லிருந்து தேர்தல் என்று அறிவிப்பு வந்த கையோடு, பேசப்படும் இன்னொரு பெயர் ரஜினி வாய்ஸ்.


ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என அலசல் கட்டுரைகள் வெளியிடுவதும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரஜினி வாய்ஸ் யாருக்கு என்று கேள்வி எழுப்புவதும் தமிழ் மீடியா உலகின் வாடிக்கை.

இந்த முறையும் தேர்தல் நேரம் வந்துவிட்டது. நிச்சயம் அவர் இப்போதைக்கு அரசியலுக்கு வரும் அறிகுறிகள் கூட தெரியவில்லை. அதேபோல இந்த முறை, தேர்தல் நேரத்தில் யாருக்கும் அவர் வாய்ஸ் கொடுக்கும் திட்டமும் இல்லையாம்.
எதற்கு வம்பு என்று, இந்த ஆண்டு அவர் இந்தியாவிலேயே இருக்க மாட்டார் என்கிறது ரஜினிக்கு நெருக்கமான வட்டாரம்.
அடுத்து ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தின் ஷூட்டிங் பிரிட்டனில் நடக்கிறது. படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு, லண்டன், வேல்ஸ், பர்மிங்ஹாம் அரண்மனை போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடக்க உள்ளது.
எனவே மார்ச் மாதம் தொடங்கி, மே வரை இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரஜினி, தேர்தலில் வாக்களிக்க மட்டும் சென்னைக்கு வந்து போவார் என்கிறார்கள்.
இடையில் தேர்தல் தொடர்பாக எந்தக் கருத்தும் / வாய்ஸும் தரும் திட்டத்தில் அவர் இல்லையாம். எந்திரனுக்குப் பின் ரசிகர்களைச் சந்திப்பதாகக் கூறியிருந்த அவர், அந்த சந்திப்பையும் மே மாதத்துக்குப் பிறகு தள்ளிப் போட்டிருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் நடந்த என்டிடிவி விருது வழங்கும் விழாவில் அரசியல் திட்டம் பற்றி கருத்து கேட்டபோது, நோ கமெண்ட்ஸ் என்றார் ரஜினி. இரு தினங்களுக்கு மும்பை விமான நிலையத்தில் அவரை திடீரென்று சந்தித்த ஒரு மூத்த பத்திரிகையாளர், ‘அரசியல் பற்றிய ஐடியாவே உங்களுக்கு இல்லையா?’ என்று கேட்டதற்கு, ‘நோ கமெண்ட்ஸ் என்றுதானே சொல்கிறேன். நோ ஐடியா என்று சொல்லவில்லையே’ என்றாராம்!

ஒரு குட்டிக்கதை

ஒரு குட்டிக்கதை...


ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த மீனவனொருவன். தன் தொழிலுக்காக வேண்டி அதிகாலையிலயே எழுந்து மீன் பிடிப்பதற்கு தேவையான வலை ஏனைய பொருள்கள் உணவு என்பவற்றை எடுத்துக்கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தான்.


கடற்கரைக்குச்சென்றதும் இருளாகவேயிருந்தது. அது கடலுக்குள் பணிக்க சரியான நேரமாக அவனுக்குப்படவில்லை சரி இன்னும் கொஞ்சம் நேரம் விடியும் வரை காத்திருப்போம் என்றென்னி கடற்கரையில் உட்கார்ந்திருந்தான்.. அப்போது ஒரு பை அவன் கண்ணில் படவே அதை எடுத்து கையை உள்ளே விட்டுப்பார்த்தான் அவை வெறும் கற்களாக தோன்றியது.


பொழுது போக்கிற்காக அதை ஒவ்வொன்றாக கடலில் வீசி எறிந்துகொண்டிருந்தான்.. அவ்வாறு வீசிக்கொண்டிருக்கையில் பொழுது புலப்படவே, அந்தப்பைக்குள் கடைசியாக ஒரு கல் மீதமிருந்தது அதையும் வீசிவிட வெளியே எடுக்கும் போது சூரிய ஒளியின் உதவியுடன் அது வெறும் கல்லல்ல மானிக்ககல்லாக அவன் கண்ணில்பட்டது... அடடா இவ்வளவு நேரமும் நான் கடலுக்குள் வீசி எறிந்த கல் எல்லாம் மானிக்க கல்லாக இருந்திருக்குமோ என்ற கவலை அவன் மனதை குடைந்தது..


இதன் மூலம் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம்... 










யாரும் அதிகாலையிலேயே எழுந்திருக்ககூடாது.

Tuesday, February 15, 2011

ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் சேர்க்கும் விஜய் மன்றங்கள்!

ஏக உற்சாகத்திலிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். வரும் பிப்ரவரி 22-ம் தேதி மீனவர்களுக்கு ஆதரவாக அவர்கள் நடத்தும் போராட்டத்தில் விஜய் பங்கேற்பதோடு, பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு ஆறுதலும் உதவியும் வழங்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டதால், அதற்கான வேலைகளில் தீவிரமாக உள்ளனர்.




இப்போதே தமிழகம் முழுக்க உள்ள மன்றங்கள் போராட்டத்துக்கு ஆள்சேர்ப்புப் பணியில் இறங்கியுள்ளனர்.
மக்கள் பிரச்சினையில் விஜய் களமிறங்கும் முதல் போராட்டம் என்பதால், ஆட்சியாளர்களை மிரள வைக்கும் அளவுக்கு பலம் காட்ட, பல ஊர்களிலும் உள்ள லோக்கல் பிரமுகர்களிடம் பேசி வருகின்றனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள். அவசியமாக இருந்தால் விஜய்யின் தந்தையும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுகிறாராம்.
இன்னொரு பக்கம் விஜய்யின் இந்தப் போராட்டத்துக்கு ரசிகர்கள் கணிசமான அளவு குவிந்து விடாமல் இருக்க செய்ய வேண்டியவை குறித்து போலீசாருக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாக விஜய் தரப்பிலிருந்தே சொல்கிறார்கள்.
“இது உண்மையா… அல்லது அப்படி ஒரு திட்டம் ஆட்சியாளர்களிடம் இருந்தால், அதை முன்கூட்டியே அம்பலப்படுத்தி போராட்டத்துக்கான தடைகளை அகற்றும் உத்தியா என்று தெரியவில்லை”, என்கிறார்கள் விமர்சகர்கள்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போதே, அதிமுகவுக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டையும் விஜய் அறிவிப்பார் என்கிறார்கள். பார்க்கலாம்!

உலகக் கோப்பைப் போட்டியால் தள்ளிப் போன 7 படங்கள்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியால் 7 தமிழ்ப் படங்களின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டுள்ளன.
புலிவேஷம், எங்கேயும் காதல், வானம், கோ, ஊலலல்லா, மாப்பிள்ளை, எத்தன் போன்ற படங்கள் இந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகவிருந்தன.

குறிப்பாக, காதலர் தினமான பிப்ரவர் 14-ம் தேதி வானம், ஊலலல்லா, கோ மற்றும் எங்கேயும் காதல் வெளியாகவிருந்தன.
ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காரணமாக இந்தப் படங்கள் ஏப்ரல் மாதம் தள்ளிப் போடப்பட்டன.
மார்ச் முதல் வாரத்தில் வெளியாகவிருந்த ஆர் கே.யின் புலி வேஷம் படமும் தள்ளிப் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பி வாசு இயக்கியுள்ளார். சதா, கார்த்திக் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.
எங்கேயும் காதல் படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடித்துள்ளனர். முழு நீள காதல் படமாக தாயராகியுள்ளது.
இதுபற்றி பிரபுதேவா கூறும் போது எங்கேயும் காதல், காதலர் தினத்தில் ரிலீஸ் ஆக வேண்டிய அழகான காதல் கதை. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அற்புதமான காதல் பாடல்களை பாரீஸ் விதிகளில் படமாக்கினோம்.
தயாரிப்பாளர் தரப்பில் உலக கோப்பை கிரிக்கெட் இருப்பதால் ரிலீசை தள்ளி வைப்பது நல்லது என்று கருதினர். எனவே ஏப்ரல் மாதத்துக்கு இப்படம் தள்ளிப் போகிறது என்றார்.

Thursday, February 10, 2011

காமெடி கலாட்டா

ச‌ரியான மக‌ன

ஏ‌ன்டி.. ந‌ல்ல பையன பெ‌த்து வ‌ச்‌சிரு‌க்க ி.

ஏ‌ங்க இ‌ப்போ தானே ந‌ல்ல ‌விதமா பே‌சி‌க்‌கிட‌்டு இரு‌ந்‌‌தீ‌ங்க..

ஆமா‌ம் 100‌‌க்கு 90 எடு‌க்க‌ச் சொ‌ல்‌லி அ‌றிவுரை சொ‌ன்னே‌ன்.

அ‌து‌க்கெ‌ன்ன இ‌ப்போ..

எ‌ன் பா‌க்கெ‌ட்ல வ‌ச்ச 100 ரூபாய காணோ‌ம், வெறு‌ம் 10 ரூபா‌ய் தா‌னஇரு‌க்கு.

***

ந‌ல்ல தூ‌க்க‌ம

ஏன்டா தூ‌ங்கு‌ம் போது கூட ஸ்கேல ப‌க்க‌த்துல வ‌ச்‌சி‌க்‌கி‌ட்டு தூ‌ங்குற?

எ‌ங்க ஆ‌சி‌ரிய‌ர்தா‌ன்பா சொ‌ன்னாரு..

எ‌ன்னா‌ன்னு சொ‌ன்னாரு..

அளவோடு தூ‌ங்கு‌ங்க‌ன்னு 


*** 

ந‌ல்ல பாட‌ம்

தாத்தா இனிமே எது படி‌ச்சாலு‌ம் வே‌‌‌ஸ்‌ட்தா‌ன்.

ஏ‌ன்டா அ‌ப்படி சொ‌ல்ற?

கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்.

அப்போ நீ படிச்சா கிடைக்காதா...?

Sunday, February 6, 2011

இது இல்லாத தமிழ் சினிமா இருக்கா..?*


*1) போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா.. 
* ஹீரோ போலிஸ்-ஆ இருக்கணும்.. 
* ஹீரோயின் அப்பா போலிஸ்-ஆ இருக்கணும்.. 
* இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்..
____________________________________________________________________ 
2) ரெண்டு கதாநாயகி இருந்தா... 
* ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்.. 
* வெளிநாட்டுக்கு போயிடணும்.. 
* இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.
_____________________________________________________________________
3) ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா... 
* ரெண்டு பேரும் அடிச்சுக்கற மாதிரி சண்டை காட்சி இருக்கணும்.. 
* ரெண்டு பேரும் கடைசியிலே வில்லனை வெளுக்கணும்.. 
* இல்லேன்னா அதிலே ஒருத்தன் புண்ணாக்கா இருக்கணும்.. 
_____________________________________________________________________
*4) ஹீரோவுக்கு தங்கச்சி இருந்தா... 
* படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும்.. 
* வில்லனை தான் லவ் பண்ணனும்.. 
* எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க அப்படின்னு
கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்.
_____________________________________________________________________
5) காமெடியன்னு ஒருத்தன் இருந்தா... 
* அடி வாங்கணும்.. 
* அடி கொடுக்கணும்.. 
* இல்லேன்னா தத்துவமோ, மூடனம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்..
____________________________________________________________________ 
6) ஹீரோவோ ஹீரோயினோ போலிஸ்-ஆ இருந்தா.. 
* கையிலே பிரம்பு வச்சிருக்கணும்.. 
* போஸ்டருக்கு போஸ் குடுக்கும் போது நம்ப கண்ண குத்தறது மாதிரி நீட்டி
காட்டணும்.. 
* கட்டாயம் காமெடி பார்ட்டி ஏட்டாவோ கான்ஸ்டபிளாவோ இருக்கணும்.* 
*7) கதாநாயகனோ, கியோ வக்கீலா இருந்தா... 
* யுவர் ஆனர்.. அப்ஜெக்சன் னு சொன்னா நீதிபதி ஏத்துக்கணும்.. 
* எதிர் வக்கீல் மரண பாயிண்ட் சொன்னா கூட தள்ளுபடி செஞ்சுடணும்.. 
* இல்லேன்னா கோர்ட்லே முள்ளு உடஞ்ச கடிகாரம் இருக்கணும்.
____________________________________________________________________ 
8) கதாநாயகன் குள்ளமா இருந்தா.. 
* கூட ந்டிக்கிற கதாநாயகி உயரமா இருக்கணும்.. 
* ஹை ஹீல்ஸ் போட்டுக்கணும்.. 
* ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.
_____________________________________________________________________ 
9) கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா.. 
* ப்ரின்சியோ, லெக்சரரோ காமெடியனாத்தான் இருக்கணும்.. 
* சக மாண்வர்களா ரெண்டு மூணு குட்டி காமெடியன்களும், வில்லனும் இருக்கணும்.. 
* கட்டாயம் கதாநாயகியை ராகிங் பண்ற மாதிரி பாட்டு இருக்கணும்.* 
_____________________________________________________________________
*10) கதாநாயகி பணக்காரியா இருந்தா.. 
* திமிர் பிடிச்சவளா இருக்கணும்.. 
* புடவையை தவிர மத்த எல்ல ட்ரெஸ்ஸும் போடணும்.. 
* கடைசியிலே ஹீரோ கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கணும்..*