வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, October 19, 2011

பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்கிறார் டோணி!



பிரகாஷ் ராஜின் புதிய படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோணி நடிக்கிறார்.




இந்தப் படத்துக்குப் பெயரே டோணி என்றுதான் வைக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தை இயக்குபவரும் பிரகாஷ் ராஜ்தான். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது:குழந்தைகள் மனநிலையை மையப்படுத்தி டோனி படம் தயாராகிறது. தேர்வுக்காக குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்கின்றனர்.



பெற்றோரும் அவர்களை அதிக மதிப்பெண் பெற நிர்ப்பந்திக்கின்றனர். குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளை வெளிக் கொண்டுவரும் கல்விமுறை நம்மிடம் இல்லை. குழந்தைகளை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது. சமூகத்துக்கு இப்படம் சில கருத்துக்களை சொல்லும். ஆகாஷ், ராதிகாஆப்தே, தலைவாசல் விஜய், நாசர், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கின்றனர்.



கே.பி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இளையராஜா இசை அமைக்கிறார்.

பிரபுதேவா எனக்கு நெருங்கிய நண்பர்.

அவர் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார்.

ஒரு பாடல் காட்சியில் வருகிறார்.

இந்த வருடம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.



இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் டோணியும் கவுரவ தோற்றத்தில் தோன்றப் போகிறாராம். இதுகுறித்து பிரகாஷ்ராஜிடம் கேட்டபோது, படத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அதை பின்னர் சொல்கிறேன் என்று கூறினார்.

Monday, October 17, 2011

சகுனி - குறித்து கார்த்தியின் லேட்டஸ்ட் பேட்டி


‘சிறுத்தை’ படத்திற்கு பிறகு கார்த்தி மும்முரமாக நடித்து வரும் படம் ‘சகுனி’. 
அறிமுக இயக்குனர் சங்கர் தயாளின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பூர்ணிதா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படம் குறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது; “பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என எல்லா படங்களுமே வெவ்வேறு களங்களில் உருவானது. இந்த படங்களிலிருந்து மாறுபட்ட அரசியல் கதையாக அமைந்திருக்கிறது ‘சகுனி’. எல்லோரிடமும் திட்டு வாங்குகின்ற ஒரு கதாபாத்திரம்.

ராதிகா, நாசர் போன்ற சீனியர் ஆர்ட்டிஸ்டுகளுடன் நடித்திருக்கிறேன். சிறுத்தையில் சந்தானத்துடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தது வரவேற்பு பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வரவேற்பு கிடைக்கும்.”

Wednesday, September 28, 2011

அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை...

அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை- விஜயகாந்த்



Vijayakanth

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்று அவசியமில்லை என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

அதிமுகவால் தூக்கி எறியப்பட்டு விட்ட தேமுதிக, வேறு வழியில்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தற்போது சிபிஎம்முடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறது. கூட்டணி அரசியலுக்குப் புகுந்த குறுகிய காலத்திலேயே இன்னொரு கூட்டணியில் அந்த கட்சி இணைந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தேமுதிக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், மயிலாப்பூரில் நடந்தது. மேயர் வேட்பாளர் வேல்முருகன் மற்றும் 200 கவுன்சிலர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி விஜயகாந்த் பேசுகையில்,

இந்த கூட்டத்துக்கு வரும்போது, இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சி தேமுதிகவுக்கு வர இருப்பதாக செய்தி கேள்விபட்டேன். நம்பினோர் கைவிடப்படார் என்று சொல்வார்கள். இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒரு நிருபர், தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி என்றீர்கள், இப்போது கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்று கேட்டார்.
இப்போதும் சொல்கிறேன், மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பபடிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தான் கூட்டணி சேர்ந்தேன்.

இப்போதுள்ள ஆட்சியை 6 மாதம் குறை சொல்ல மாட்டேன். அதன் பிறகுதான் விமர்சிப்பேன்.
போலீசார் சரியாக இருந்தால் நாட்டில் 50 சதவீத பிரச்சனைகள் சரியாகி விடும்.

உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்குத்தான் ஓட்டு போட வேண்டுமா? அவர்கள் வந்தால்தான் நல்லது செய்வார்களா? எங்கு பார்த்தாலும் ரோடு சரியில்லை. ஒரு மணி நேர மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளக்காடாகி விடுகிறது. கொசுக்கடி தாங்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் குப்பை, திருட்டு, கொள்ளை நடக்கிறது. இதையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா?.

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவுக்கு வாய்ப்பு தாருங்கள். மாற்றத்தை தருவோம்.
சாலை, மருத்துவம், போக்குவரத்து வசதி என்று செய்ய ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் நிதி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்று அவசியமில்லை. பிரிச்சு, பிரிச்சு ஆட்சியை கொடுங்கள்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரிசி விலை ஏறவில்லை. என்னிடம் ஆட்சியை கொடுங்கள். மக்களை தங்க தட்டில் வைத்து அழகுபார்ப்பேன்.

ஜால்ரா அடிப்பது எனக்கு பிடிக்காது. ஏனென்றால் நான் வளர்ந்தது அப்படி. தவறு நடந்தால் கோபப்படுவேன். தட்டிக் கேட்பேன். தேமுதிகவினர் ஐந்து பைசா கூட லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்றார்.

தடையை மீறி கார் ஓட்டிய சவூதி அரேபிய பெண்ணுக்கு 10 கசையடி தர உத்தரவு!

Saudi Woman Driver

பெண்கள் கார் ஓட்டக் கூடாது என்ற தடையை மீறி கார் ஓட்டிய ஒரு சவூதி அரேபியப் பெண்ணுக்கு 10 கசையடிகள் தர அந்த நாட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சவூதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முஸ்லீம் நாடுகளிலேயே சவூதியில் மட்டுமே பெண்களுக்கு அதிக அளவில் கட்டுப்பாடுகள் உள்ளன. கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக் கூடாது, ஆண் துணை இல்லாமல் வெளிநாடு போகக் கூடாது, வாக்குரிமை கிடையாது என பல கட்டுப்பாடுகள். இதில் வாக்குரிமைக்கு வழிவகுத்து சமீபத்தில் அந்த நாட்டு மன்னர் அப்துல்லா உத்தரவிட்டார்.

ஆனால் மன்னர் இந்த முடிவை எடுக்க முக்கியக் காரணம், கார் ஓட்டக் கூடாது என்ற தடையை அந்த நாட்டுப் பெண்கள் சிலர் மீற ஆரம்பித்ததுதான். கார் ஓட்டும் தடையை மீறி அந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணுரிமை அமைப்பினர் கார் ஓட்டத் தொடங்கினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி எச்சரித்து, இனிமேல் கார் ஓட்ட மாட்டோம் என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வந்தனர்.

பெண்களுக்கு வாக்குரிமை அளித்து மன்னர் உத்தரவிட்ட சில நாட்களிலேயே இப்படி ஒரு தண்டனையை அறிவித்திருப்பது சவூதி பெண்ணுரிமைவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

தண்டனைக்குள்ளாகவுள்ள பெண்ணின் பெயர் ஷைமா ஜெஸ்டெய்னா. இவருக்கு வயது 30. அனுமதி இல்லாமல் கார் ஓட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. தன் மீதான தண்டனையை எதிர்த்து ஷைமா அப்பீல் செய்துள்ளதாக அவர் சார்பில் சமர் பதாவி என்பவர் கூறியுள்ளார்.

உலகிலேயே சவூதியில் மட்டுமே பெண்கள் கார் ஓட்டத் தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சவூதி பெண்கள் மட்டுமல்ல பிற நாட்டுப் பெண்களும் கூட இங்கு கார் ஓட்ட அனுமதி கிடையாது. இதனால் தங்களது தேவைகளுக்காக வெளி டிரைவர்களை நாடும் நிலையில் சவூதி பெண்கள் உள்ளனர். ஆனால் டிரைவர்களுக்கான குறைந்த பட்ச மாதச் சம்பளம் 400 டாலர் என்பதால் டிரைவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளவும் அவர்கள் தயங்குகின்றனர். இதனால் தங்களது உறவினர்களையே கார் ஓட்டச் சொல்லி கேட்டுக் கொள்ளும் பெண்கள் அங்கு அதிகம்.

குழந்தைகளை அழைத்து வர பள்ளி செல்ல, கடைகளுக்குப் போய் வர, டாக்டரிடம் போக என எதற்குமே அவர்களால் கார் ஓட்டிச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரசின் இந்த கடுமையான கெடுபிடிகள் குறித்து சோஹிலா மேலும் குமுறலுடன் கூறுகையில், நபிகள் நாயகத்தின் மனைவியர் கூட ஒட்டகம், குதிரைகள் ஆகியவற்றை ஓட்டியதாக குரான் கூறுகிறது. போக்குவரத்துக்கு அப்போது இருந்தவை அவை மட்டுமே. இந்தக் காலத்தில் வாகனங்கள் வந்து விட்ட நிலையில் அதை ஓட்டக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று கேட்கிறார்.

கார் ஓட்டியதற்காக கசையடி தண்டனை தரப்பட்டுள்ளது உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, September 25, 2011

குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்


சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சானா கான். இப்படத்தை அடுத்து‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது வெளிவந்துள்ள ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படவாய்ப்பு இன்றி இருப்பவரை குத்துப்பாட்டுக்கு ஆட கூப்பிடுகிறார்களாம்.
இதுகுறித்து சானா கான் கூறியாதவது:
“தமிழில் குத்து பாடலுக்கு ஆடுவது, கெஸ்ட் ரோலில் நடிப்பது அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் நிலையில் இதுபோல் நடிக்க விரும்பவில்லை. என்னை யாரும் குத்து பாட்டுக்கு ஆட கூப்பிடாதீங்க என்று என்னைத் தேடு வர்வோர்களிடம் சொல்லிவிட்டேன்.
‘ஆயிரம் விளக்கு’ பட ஷூட்டிங்கின் போது எனது அம்மாவுக்கு உடலநலமில்லாமல் போனது. அவரை மருத்துவமனையில் சேர்த்த நேரம். ஷூட்டிங், மருத்துவமனை என்று மாறி மாறி அலைந்தேன். கவலைகளை மறைத்துக்கொண்டு நடித்தேன். அதற்கான பலன் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?

அஜித்…….எந்த ஒரு சினிமா நடிகர்களையும் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது என்ற கொள்கையை எவ்விடத்திலும் வலியுறுத்தும் என் கருத்தை உடைத்தெறிந்த ஒரு நடிகர் அஜித். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர். கொழுகொம்பு இன்றி வளர்ந்த கொடி அஜித்.


தமக்கிருக்கும் பிரபல்யத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யத்துணிபவர்களுக்கு மத்தியில், தன் பிரபல்யத்தையே ஒதுக்கி வைத்து விட்டு தானும் ஓர் சராசரி குடிமகன் தான் என்று வாழ்ந்து வருபவர்.மேலே உள்ள படத்தை பார்த்தாலே புரியும். வாக்களிக்க செல்லும்போதுகூட மக்களோடு மக்களாக நின்று வாக்களித்துவிட்டு வருபவர்.
இதுவரையான தமிழ் சினிமா வரலாறு அஜித் போன்ற உன்னதமான ஒரு மனிதரை கண்டிருக்குமா என்பது கேள்வியே. ஒருவேளை சிலர் பார்வைக்கு அஜித் சாதாரணமாக தெரியலாம். ஆனால் என்னைப்பொறுத்த வரை அஜித் ஒரு மாமனிதன் என்று சொல்வதில் கூட தவறில்லை. மாமனிதன் என்று சொல்வதற்கு அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?.. இன்று ஒரு சாதாரண பதவியில் இருந்தாலோ, சிறிய புகழை அடைந்தூவிட்டாலோ அதை வைத்து அட்டூழியம் செய்பவர்களுக்கு மத்தியில் எவ்வளவோ பெரிய பெயர் புகழை அடைந்திருந்தும் அதை ஓரமாக தள்ளி வைத்துவிட்டு வாழ்ந்து வருகிறாரே, அது போதாதா?.
அஜீத் அதிரடியாக தன் ரசிகர் மன்றங்களை கலைத்தபோது அது பற்றி பல்வேறு தகவல்கள் வந்தன. ரசிகர்களின் வாழ்க்கையை பாழாக்கக்கூடாது என்றுதான் அந்த முடிவை எடுத்தார் என்றும், தன் பேச்சை கேட்காமல் தேர்தலில் தி.மு.க விற்கு ஆதரவு வழங்கினார்கள் என்பதால்தான் கலைத்தார் என்றும் பல்வேறு தகவல்கள் வந்தன. இருந்தபோதும் அந்த செயல் பலரது மனதிலும் அஜித் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.
அந்த துணிச்சல் தமிழ் ஹீரோக்களுக்கு இதுவரை வந்ததுமில்லை. இனிமேல் வரப்போவதுமில்லை.
அதன் பின்னர் மங்காத்தா வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டபோது பலரும் ஜெயலலிதாவை சந்திக்கும்படி வற்புறுத்தினார்கள். அதை அடியோடு மறுத்த அஜித் “ இப்போது சென்று சந்தித்தால் அது சுயநலமாகிவிடும்” என்று கூறியிருந்தார். அது அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்தியது.
கண்டிப்பாக அஜித் என்ற நடிகனை விட்டு அஜித் என்ற மனிதனை முன்னுதாரணமாக கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை.
மங்காத்தா வெற்றிக்குப் பின்னர் தல காட்டில் மழை அடிக்கத்தொடங்கிவிட்டது. அடுத்து பில்லா 2 விலும் அதற்கடுத்து ஜெயம் ராஜா அல்லது ஷங்கரின் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படத்திலும் நடிக்கவிருக்கிறார். தல தொடர்ந்து வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்...


Tuesday, September 20, 2011

பலாத்காரம் செய்யவில்லை... எச்சரித்தேன்!!!


மது விருந்தின்போது பாலியல் உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை கடுமையாக எச்சரித்தேன். இதனால் என்மீது சோனா பொய் புகார் கொடுத்துள்ளார், என தனது முன்ஜாமீன் மனுவில் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.


'மங்காத்தா' படத்தில் நடித்த வைபவ் என்பவரது வீட்டில் செப்டம்பர் 14-ந் தேதி மது விருந்து நடந்தது. அப்போது தன் மேல் பாய்ந்த தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண், ஆடைகளைக் களைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பாண்டிபஜார் போலீசில் நடிகை சோனா புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் 4 வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த புகாரில் குற்றத்துக்கான முகாந்திரம் இருப்பதாகவும் போலீசார் கருதுகின்றனர்.

மங்காத்தா' படத்தின் வெற்றியைகொண்டாட நடிகர் வைபவ் என்னை அழைத்தார். அதனால் அவரது வீட்டிற்கு சென்றேன். என்னைபோல் பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லாரும் இரவு 11 மணிக்கு மேல் மது அருந்தத் தொடங்கினோம்.

நடிகை சோனாவும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டார். அவர் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடக் கூடியவர். சினிமாவில் வெற்றி பெற முடியாத நிலையில், படங்களைத் தயாரித்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்சினையில் சிக்கினார்.

சினிமாவில் என்னுடைய வெற்றி மற்றும் எனது குடும்ப பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் சோனா உள்நோக்கத்துடன் நடந்துகொண்டார். கவர்ச்சியால் மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளதாக தெரிகிறது.

அந்த எண்ணத்தோடு குடிபோதையில் என்னிடம் வந்து பேசினார். நல்ல போதையில் அவர் இருந்தார். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, என்னிடம் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்துகொண்டார். எனவே நான் சோனாவை கடுமையாக எச்சரித்தேன்.

அவரை அனைவரது முன்பாகவும் நான் எச்சரிக்கை செய்ததால், அவருக்கு அவமானமாக போய்விட்டது. அதைத்தொடர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். மறுநாள் போலீசில் என்மீது பொய்யான பாலியல் புகாரை கொடுத்துள்ளார்.

Monday, September 12, 2011

தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டம் 15ஆம் தேதி துவக்கம்


அரசு உதவி பெறும் மேநிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழக அரசின் இலவச மடிக்கணினித் (லேப்டாப்)திட்டம் இந்த வாரம் முதல் துவங்கவுள்ளது.
இந்த இலவச மடிக்கணினித் திட்டத்தின் கீழ் சுமார் 68 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படவுள்ளன. இதன் துவக்கமாக வரும் 15ஆம் தேதி இந்தத் திட்டம் அறிமுகமாகிறது.இந்த ஆண்டில் மட்டும் 9.12 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் மீதி மடிக்கணினிகள் வழங்குதல் 4 ஆண்டுகளில் முழுமை பெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டெம்பர் 15ஆம் தேதியன்று இந்த இலவச மடிக்கணினித் திட்டம் துவங்கப்படுகிறது.நாட்டில் முதன்முறையாக இலவசமாக வழங்கப்படும் இந்த மெகா இலவசத் திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேநிலைப்பள்ளி மாணவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மற்றும் பாலி-டெக்னிக் மாணவர்கள் பயனடையவுள்ளனர்.

இந்த மடிக்கணினி இலவசத்திட்டத்திற்கு ரூ.10,200 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த ஆண்டு வழங்கப்படும்
 இலவச மடிக்கணினிகளின் எண்ணிக்கை 9.12 லட்சத்திற்காக தமிழக அரசு
 ரூ.912 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.தமிழ்நாடு எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் (எல்காட்)
 இந்த மடிக்கணினி வினியோகத்திற்காக நியமிக்கப்பட்டுள்ளது. 
முதல் கட்ட 9.12 மடிக்கணினிகள் வழங்குதல் திட்டத்திற்காக எல்காட் ஏற்கனவே டெண்டர்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.செப்டெம்பர் 15ஆம் தேதி மடிக்கணினி வழங்குதலுக்காக ஹூலெட்-பகார்ட் மற்றும் ஆசர் தகவல் தொழில்நுட்ப நிறுவங்கள் முறையே 4,000 மற்றும் 2000 மடிக்கணிகளை வழங்கியுள்ளது.

Saturday, August 27, 2011

2-வது கணவரை பிரிந்தார் நடிகை வனிதா – ஆகாஷுடன் சேர்ந்து வாழ விருப்பம்


இரண்டாவது கணவரை பிரிந்து விட்டேன். முதல் கணவர் நடிகர் ஆகாஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று நடிகை வனிதா அறிவித்துள்ளார்.

முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா. ஆகாஷுடன் வளரும் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா போராடினார். போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான்.

இதையடுத்து, மகனுக்காக இரண்டாவது கணவர் ராஜனை விட்டு விலகி விட்டதாக நடிகை வனிதா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

என் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கருதிதான் இரண்டாம் திருமணம் செய்தேன். ஆனால் என் மகன் ஸ்ரீஹரி, அப்பா ஆகாஷ் இன்னும் தனியாக தானே இருக்கிறார். நீ எப்படி இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கண்டித்தான். அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

அவசரப்பட்டு தவறு செய்து விட்டதை உணர்ந்தேன். அவன் அம்மாவை இன்னொருத்தருடன் பார்க்க விரும்பவில்லை என்று புரிந்தது. மகன் எனக்கு முக்கியம். அவனுக்கு விருப்பம் இல்லாத எதையும் இனி செய்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

ராஜனுக்கும் சமீபத்திய பிரச்சினைகள் மன உளைச்சலை ஏற்படுத்தின. இருவரும் உட்கார்ந்து பேசி பிரிவது என முடிவு எடுத்து விலகி விட்டோம். இப்போது என் மகன் ஸ்ரீஹரி என்னுடன் நன்றாக பேசுகிறான். நானும் ஆகாஷு ம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் பல தடவை சண்டைகள் வந்துள்ளன. அவரை அவமானப்படுத்தி பேசி இருக்கிறேன். ஆனாலும் இன்று வரை அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டு உள்ளது. நாங்கள் சேர்ந்து வாழ ஆசை இருந்தாலும் நடக்குமா? என்று தெரியவில்லை.

எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். என்னுடன் பேச வேண்டும். அதுதான் முக்கியம். ஆகாஷ் மேல் நான் வைத்திருந்த காதல் உண்மையானது. அதனால் அவருடன் மீண்டும் என்னால் பேச முடிகிறது. அவரும் என்னுடன் நன்றாக பேசுகிறார். என் அப்பா விஜயகுமார் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். அவருடன் பேச ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அவரை நேரில் சந்திக்க விடாமல் சிலர் தடுக்கின்றனர். அண்ணனும் சகோதரிகளும் மீண்டும் நான் குடும்பத்தோடு சேரக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

‘ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க!’ – நம்ம தலையோட புண்ணியத்தில ஒண்ணு கூடிட்டாய்ங்க!!


சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என பிரிந்து நின்று திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மூன்று நிறுவனங்களும், பிரச்சினை என்று வந்ததும் ஒன்றுக்கொன்று கரம் கோர்த்து நிற்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்துதான் அஜீத்தின் மங்காத்தாவை வெளியிடுகிறார்கள் என்பது இன்றைய ஸ்பெஷல் செய்தி.

மங்காத்தா திரையரங்குகளைத் தொடுவதே சிரமம் என்று கடந்த சில தினங்கள் முன்பு வரை செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில்தான் ஞானவேல் ராஜா உள்ளே வந்தார். அவர் படத்தின் தயாரிப்பாளரான க்ளவுட் நைன் பெயரையே அவர் சுத்தமாக மறைத்துவிட, போங்கப்பா நீங்களும் உங்க டீலும் என கடுப்பானார் தயாநிதி அழகிரி.

இந்த நேரத்தில் அவரது க்ளவுட் நைன் பேனரையும் சன் பிக்சர்ஸையும் இணைத்து வைத்தவர் கருணாநிதியின் மற்றொரு வாரிசான உதயநிதி ஸ்டாலின்.

தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் உதவியுடன் சன் பிக்சர்ஸ் வழங்கும் அஜீத்தின் மங்காத்தா என இப்போது நிலைமை மாறியிருக்கிறது. விளம்பரங்களில் ‘க்ளவுட் நைன் – சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தயாநிதி அழகிரி, “அண்ணன் உதயநிதிக்கு நன்றி. அவர்தான் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்தார்” என்று கூறியுள்ளார். பொதுவாக ஒரு படத்துக்கு 25 நாட்களுக்கு மேல் விளம்பரம் செய்து வெளியிடுவது சன் பிக்சர்ஸ் பாணி. ஆனால் தயாநிதிக்காக இந்தப் படத்தை ஒரு வாரத்துக்குள் விளம்பரம் செய்து வெளியிடுகிறார்கள்.

படம் வரும் 31-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என உறுதியளித்துள்ளார் தயாநிதி அழகிரி.

Thursday, August 25, 2011

சிங்கப்பூர்ல பாட்டு, தீபாவளிக்கு ட்ரீட்டு!


தயாநிதி ஸ்டாலின் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் '7ஆம் அறிவு' படம் எப்போது வெளிவரும் என்ற கேள்விக்கு, இன்று பதில் கிடைத்திருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாக, இதன் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்திருக்கிறார். இப்படம் எப்போது வெளிவரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. அதற்கு காரணங்களும் இருக்கின்றன; டி.என்.ஏக்களின் ரகசியத்தை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். நம் மூதாதையர்கள் எவ்வளவு சர்வ வல்லமை பொருந்தியவர்கள், நமது வரலாறு என்ன, நம் திறமைகள் என்னென்ன என்பதை அறியவியல் பூர்வமாக காட்டியிருக்கிறாராம். சூர்யா இப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கிறார். ஒருவர் புத்த துறவியாகவும், ஒருவர் சர்க்கஸ் கலைஞராகவும் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இப்படத்தின் கதாநாயகியாக (விஞ்ஞானியாக) நடித்துள்ளார். 'கஜினி' படத்தில் சூர்யா-ஏ.ஆர்.முருகதாஸ்-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி அபார வெற்றியைப் பெற்றது. இரண்டாவது முறையாக இக்கூட்டணி இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் புனைகதையாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்படத்தில், வில்லன் வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறார். ஹாலிவுட்டிற்கு இணையாக படத்தை உருவாக்கி வருவது, குங்பூ சண்டைக் காட்சியை கிளைமாக்ஸில் இணைத்திருப்பது, இவை எல்லாம் தமிழ் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விலை சுமார் ஏழு கோடியாம். அதுமட்டுமல்ல, இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் நேரடியாக ஒளிபரப்பப் போகிறதாம் சன். இப்படத்தை பெரிய விலை கொடுத்து வாங்க அத்தனை சேனல்களுக்கும் அடிதடி போட்டி. ஆனால் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படங்கள் எல்லாமே கலைஞர் டிவி அல்லது விஜய் டிவி தவிர வேறெந்த சேனல்களுக்கும் கொடுப்பதில்லை அவர். இந்த நிலையில்தான் சன் குழும தலைவர் கலாநிதி மாறனும் உதயநிதியும் சந்தித்திருக்கிறார்கள். முழு படத்தையும் வாங்கி வெளியிட சன் தயாராக இருந்தும், தற்போதைக்கு சேனல் ரைட்ஸ் வரைக்கும்தான் கொடுத்திருக்கிறாராம் உதயநிதி. செப்டம்பர் 10ந் தேதி சிங்கப்பூரில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறதாம். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 26-ம் தேதி, அதாவது வரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வருகிறது என்று இப்படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் அவரது டுவிட்டர் இணைய பக்கத்தில் உறுதிபடக் குறிப்பிட்டுள்ளார். ஓ.கே. ஓ.கே. ட்ரீட்டுக்கு எல்லாரும் ரெடி..........


Tuesday, August 23, 2011

பிரகாஷ்ராஜ் இயக்கும் 'தோனி'!


தனக்குப் புகழை அள்ளித்தந்த சினிமாவுக்கு தரமான படங்களை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர் பிரகாஷ்ராஜ். திரைமொழியின் மீது தீவிரக்காதல் கொண்ட பிரகாஷ்ராஜ், தனது தயாரிப்பில் 'மொழி' என்ற அற்புதமான படத்தைக் கொடுத்தார். இதுதவிர 'வெள்ளித்திரை', 'அபியும் நானும்', 'பயணம்' போன்ற தரமான படங்களின் தயாரிப்பாளராக முகம் காட்டியவர், இயக்குநராகவும் முகம் காட்ட விரும்பி, கன்னடத்தில் 'அபியும் நானும்' படத்தை 'நானு நானா கனசு' என்ற தலைப்பில் இயக்கி அசத்தினார். தற்போது மீண்டும் ஒரு படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இயக்கத் தயாராகி விட்டார். இந்திய க்ரிகெட் வீரரான தோனியின் பெயரையே படத்தின் தலைப்பாக 'தோனி' என வைத்திருக்கும் பிரகாஷ்ராஜ், இதுபற்றி தனது டிவிட்டரில் 'தோனி' என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க இருக்கிறேன். எனது அடுத்த பயணம் துவங்கி விட்டது" என்று பதிவிட்டிருகிறார். இம்முறை இளையராஜாவை இசைக்கும் நா.முத்துக்குமாரை பாடல்களுக்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஓகே.. ஓகே.. ஆரம்பிங்க கலக்கலான ஒங்க க்ரிக்கெட் டூர.....

Monday, August 22, 2011

விஜயகாந்த் கூட்டணியை யாராலும் பிரிக்கவே முடியாது...


அதிமுக - தேமுதிக கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்று திருப்பரங்குன்றம் 
எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ராஜா தெரிவித்துள்ளார். 


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெள்ளப்பாறைப்பட்டியில் புதிய பேருந்து வழித்தட துவக்க விழா நடந்தது. அதில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ராஜா சிறப்பு அழைப்பாரக கலந்து கொண்டு புதிய வழித்தடத்தை துவக்கி வைத்தார்.

அந்த விழாவில் அவர் பேசியதாவது,
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. எப்படி சட்டசபை தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணியை வெற்றி பெறச் செய்தீர்களோ அதே போல் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதிமுக- தேமுதிக கூட்டணியை பிரிக்க முயற்சி நடந்து வருகிறது. 
அது வீண் முயற்சி. முதல்வர் ஜெயலலிதா, 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணியை யாராலும் பிரி்க்கவே முடியாது என்றார். 


இந்த வழித்தடம் வெள்ளப்பாறைப்பட்டியிலிருந்து நாகமலை புதுக்கோட்டை, சிம்மக்கல் வழியாக மதுரை மாட்டுத்தாவணிக்கு செல்லும்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அரசு...

ஒரே வாரத்தில் 400 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அரசு...



தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 400 இன்ஸ்பெக்டர்கள்(சட்டம்-ஒழுங்கு) அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து காவல் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஏராளமான போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர், செய்யப்பட்டு வருகின்றனர்.

ஓரிரு உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படும் நிலை மாறி தற்போது பலர் கூண்டோடு மாற்றம் செய்யப்படுகின்றனர்.

கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 250 டி.எஸ்.பி.க்கள், 400 சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.பி., சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.

Saturday, August 20, 2011

தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி





தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி! என்ன அந்த நற்செய்தி என்று கேட்கிறீர்களா? தமிழ்நாட்டில் நிலவி வந்த அழகு பஞ்சத்த தீர்க்க வந்த சமீரா ரெட்டி சென்னையிலேயே செட்டிலாகப் போகிறார் என்பதுதான் அந்த செய்தி.
பிரபுதேவாவின் இயக்கத்தில் விஷாலுடன் ‘வெடி’, லிங்குசாமியின் வேட்டை என்று தமிழில் பிஸியாக இருக்கும் சமீரா ரெட்டிக்கு. தமிழ்நாடு மிகவும் பிடித்து விட்டதாம். அதிலும் சென்னை மிக மிக பிடித்து விட்டதாம்.

எப்போது பார்த்தாலும் சென்னை, தமிழ்நாடு, மெரினா, இட்லி, சாம்பார் என்று தமிழ்நாட்டு புராணம் பாடிக்கொண்டே இருப்பதால் சமீரா ரெட்டியின் அப்பா சென்னையில் ஒரு வீடு வாங்கி சமீராவுடன் செட்டிலாகாம் என்று ஐடியாவில் இருக்கிறாராம்.

Tuesday, August 16, 2011

இன்று முதல் சமச்சீர் பாட வகுப்புகள் தொடக்கம்:


சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதையடுத்து, சமச்சீர் பாட வகுப்புகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க உள்ளன.

""மாநிலம் முழுவதும் மொத்தம் 86 சதவீத புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 20 சதவீதப் புத்தகங்கள் கிடங்குகளில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக'' அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 முதல் 20 சதவீதம் வரையான புத்தகங்களை அச்சிடுவது, பைண்டிங் செய்வது உள்ளிட்ட பணிகள் இப்போது நடைபெறுகின்றன. பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சமச்சீர் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய 41 பகுதிகளை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, செம்மொழி வாழ்த்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த குறிப்புகள், சென்னை சங்கமம், புதிய தலைமைச் செயலகக் கட்டடம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், தி.மு.க. குறித்த குறிப்புகள் போன்ற பகுதிகளை சமச்சீர் பாட புத்தகங்களில் இருந்து கருப்பு மையிட்டும், ஸ்டிக்கர் ஒட்டியும், கிழித்தும் நீக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தப் பணிகள் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்தன. புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் திங்கள்கிழமையோடு பல பள்ளிகளில் நிறைவடைந்ததாகவும், மாணவர்களுக்குப் புத்தகங்கள் திங்கள்கிழமையே விநியோகிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தக விநியோகப் பணிகள் குறித்து அதிகாரிகள் கூறியது:

அரசு உத்தரவைத் தொடர்ந்து 65 கல்வி மாவட்டங்களில் இருந்த சமச்சீர் பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. இவற்றில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மீதமுள்ள புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. பள்ளிகளுக்கு இந்தப் புத்தகங்கள் வர, வர அவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். ஒரு சில பாடப்புத்தகங்கள் தவிர பெரும்பாலான புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பணிகள் தொடர்பாக தலைமையாசிரியர்கள் கூறியது:

பெரும்பாலான பள்ளிகளுக்கு இதுவரை 50 சதவீத புத்தகங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. ஒரு சில வகுப்புகளுக்கு ஒரு புத்தகம் மட்டுமே கிடைத்துள்ளது. பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகம் விநியோகிக்கப்படவே இல்லை.

பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைதான் ஸ்டிக்கர் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பப்பட்டன. சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புத்தகங்கள் கிடைத்தவுடன் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வளவு புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யாததே புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்காததற்குக் காரணம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்புக்கு முன்னுரிமை: ""பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்கள் 80 சதவீதம் தயாராக உள்ளன. இந்தப் புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கி அச்சடித்துத் தரப்படும். மீதமுள்ள வகுப்புகளுக்கான புத்தகங்கள் 60 சதவீதம் வரை தயாராக உள்ளன. மீதமுள்ள புத்தகங்கள் பல்வேறு நிலைகளில் தயாராகி வருகின்றன. இந்தப் புத்தகங்களை முழுமையாக அச்சிட்டு வழங்க 3 வாரங்கள் வரை ஆகலாம்'' என்று பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரிக் பள்ளிகள்: மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சிட்டு வழங்க 1 மாதம் வரை ஆகும் என்று தனியார் பதிப்பாளர்கள் கூறிவிட்டனர். எனவே, இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்திலேயே புத்தகங்களை வாங்க முடிவு செய்துள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இலவச புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கி அச்சிடும் பணி நடைபெற்றது. மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களும் அச்சிட்டு வழங்க மேலும் ஒரு சில நாள்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, August 15, 2011

‘அப்பளத்துக்கே வழியில்லையாம், அண்டாச் சோறு கேக்குதாம்’! – என்ன கொடும சார் இது!


இந்தியிலும் சரி, தமிழிலும் சரி ஆசினுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கையில் படமில்லை என்ற போதிலும் அவரது பந்தா பேச்சுக்கு சற்றும் குறைச்சலைக் காணோம்.
தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிசியாக நடித்து வந்த ஆசின் திடீரென இந்திக்குக் கிளம்பிப் போனார். முதல் படமான கஜினி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், அவருக்கு இந்தியிலும் கதவு திறந்தது. தொடர்ந்து சல்மான் கானுடன் இரண்டு படங்களில் ஜோடி போட்டார். கூடவே கிசுகிசுக்களும் படையெடுத்துக் கிளம்பின.
ஆனால் கஜினிக்குப் பிறகு ஆசினுக்கு இந்தியில் பெரியஅளவில் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இடையில் விஜய் கூப்பிட்டார் என்பதற்காக காவலன் படத்தில் நடித்துக் கொடுத்தார்.
காவலன் படம் வெற்றிகரமாக ஓடியதால், ஆசினைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவரோ பிரஸ்டிஜ் பார்க்க ஆரம்பித்தார். இந்திக்குப் போய் விட்ட பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்தால் தனது கெளரவம் என்னாகும் என்ற ரீதியில் பேசி வருகிறாராம் ஆசின்.
இதனால் தன்னைத் தேடி வருகிற தமிழ்ப் பட வாய்ப்புகளை அவர் தட்டி வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியிலும் பெருமளவில் வாய்ப்புகள் வராததால் சற்றே டென்ஷனாக இருக்கிறாராம் ஆசின்.
இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அமெரிக்காவில் கூப்பிட்டாக, ஆப்பிரிக்காவில் கூப்பிட்டாக என்ற ரீதியில் பந்தாவாக பேசி வருகிறாராம். தமிழில் நல்ல கதைகள் வந்தால்தான் நடிப்பேன் என்றும் கூறி வருகிறாராம்.
‘அப்பளத்துக்கே வழியில்லையாம், அண்டாச் சோறு கேக்குதாம்’- இந்தப் பழமொழி ஆசினுக்கு பொருத்தமாக இருக்கும்!

என்னுடன் இமயமலைக்கு எந்த ஒரு நடிகையும் வரவில்லை: விஷால்!!!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போல நடிகர் விஷாலும் ஆண்டிற்கு இமயமலைக்கு செல்வாராம். ஒவ்வொரு முறையும் தனியாக இமய மலைக்கு செல்லும் விஷால், அங்கே குறைந்தது ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு வருவாராம். ஆனால் இந்த முறை அவர் தனியே செல்லாமல், ஒரு நடிகையுடன் இமயமலைக்கு சென்றாராம்.
சரி யார் அந்த நடிகை என்று கேட்டால், கோலிவுட் வட்டரமோ, மிகவும் ரகசியக் குரலில் ‘ஸ்ரேயாதான் அந்த நடிகை’ என்று கிசுகிசுத்து வருகிறது. இதைக் கேள்விப்பட்ட விஷால் மிகவும் நொந்து போய் விட்டாராம்.
“யார் தான் இந்த மாதிரியான வதந்திகளை கிளப்புறாங்கன்னே தெரியல. என்னோட குடும்பத்தினரில் இருந்து ஒருத்தரையும் இமயமலைக்கு கூட்டிகிட்டுப் போனதில்ல. ஆனா அந்த நடிகையோட போனதா சொல்றாங்க. எந்த ஆதாரமும் இல்லாம எப்படித்தான் இப்படியொரு வதந்தியை பரப்புறாங்களோ’ என்று மனிதர் புலம்பிவருகிறாராம்