This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Wednesday, October 19, 2011
பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்கிறார் டோணி!
Monday, October 17, 2011
சகுனி - குறித்து கார்த்தியின் லேட்டஸ்ட் பேட்டி
Wednesday, September 28, 2011
அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை...
அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை- விஜயகாந்த்
அதிமுகவால் தூக்கி எறியப்பட்டு விட்ட தேமுதிக, வேறு வழியில்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தற்போது சிபிஎம்முடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறது. கூட்டணி அரசியலுக்குப் புகுந்த குறுகிய காலத்திலேயே இன்னொரு கூட்டணியில் அந்த கட்சி இணைந்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தேமுதிக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், மயிலாப்பூரில் நடந்தது. மேயர் வேட்பாளர் வேல்முருகன் மற்றும் 200 கவுன்சிலர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி விஜயகாந்த் பேசுகையில்,
இந்த கூட்டத்துக்கு வரும்போது, இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சி தேமுதிகவுக்கு வர இருப்பதாக செய்தி கேள்விபட்டேன். நம்பினோர் கைவிடப்படார் என்று சொல்வார்கள். இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒரு நிருபர், தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி என்றீர்கள், இப்போது கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்று கேட்டார்.
இப்போதும் சொல்கிறேன், மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பபடிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தான் கூட்டணி சேர்ந்தேன்.
இப்போதுள்ள ஆட்சியை 6 மாதம் குறை சொல்ல மாட்டேன். அதன் பிறகுதான் விமர்சிப்பேன்.
போலீசார் சரியாக இருந்தால் நாட்டில் 50 சதவீத பிரச்சனைகள் சரியாகி விடும்.
உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்குத்தான் ஓட்டு போட வேண்டுமா? அவர்கள் வந்தால்தான் நல்லது செய்வார்களா? எங்கு பார்த்தாலும் ரோடு சரியில்லை. ஒரு மணி நேர மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளக்காடாகி விடுகிறது. கொசுக்கடி தாங்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் குப்பை, திருட்டு, கொள்ளை நடக்கிறது. இதையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா?.
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவுக்கு வாய்ப்பு தாருங்கள். மாற்றத்தை தருவோம்.
சாலை, மருத்துவம், போக்குவரத்து வசதி என்று செய்ய ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் நிதி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்று அவசியமில்லை. பிரிச்சு, பிரிச்சு ஆட்சியை கொடுங்கள்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரிசி விலை ஏறவில்லை. என்னிடம் ஆட்சியை கொடுங்கள். மக்களை தங்க தட்டில் வைத்து அழகுபார்ப்பேன்.
ஜால்ரா அடிப்பது எனக்கு பிடிக்காது. ஏனென்றால் நான் வளர்ந்தது அப்படி. தவறு நடந்தால் கோபப்படுவேன். தட்டிக் கேட்பேன். தேமுதிகவினர் ஐந்து பைசா கூட லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்றார்.
தடையை மீறி கார் ஓட்டிய சவூதி அரேபிய பெண்ணுக்கு 10 கசையடி தர உத்தரவு!
முஸ்லீம் நாடுகளிலேயே சவூதியில் மட்டுமே பெண்களுக்கு அதிக அளவில் கட்டுப்பாடுகள் உள்ளன. கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக் கூடாது, ஆண் துணை இல்லாமல் வெளிநாடு போகக் கூடாது, வாக்குரிமை கிடையாது என பல கட்டுப்பாடுகள். இதில் வாக்குரிமைக்கு வழிவகுத்து சமீபத்தில் அந்த நாட்டு மன்னர் அப்துல்லா உத்தரவிட்டார்.
ஆனால் மன்னர் இந்த முடிவை எடுக்க முக்கியக் காரணம், கார் ஓட்டக் கூடாது என்ற தடையை அந்த நாட்டுப் பெண்கள் சிலர் மீற ஆரம்பித்ததுதான். கார் ஓட்டும் தடையை மீறி அந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணுரிமை அமைப்பினர் கார் ஓட்டத் தொடங்கினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி எச்சரித்து, இனிமேல் கார் ஓட்ட மாட்டோம் என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வந்தனர்.
பெண்களுக்கு வாக்குரிமை அளித்து மன்னர் உத்தரவிட்ட சில நாட்களிலேயே இப்படி ஒரு தண்டனையை அறிவித்திருப்பது சவூதி பெண்ணுரிமைவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
தண்டனைக்குள்ளாகவுள்ள பெண்ணின் பெயர் ஷைமா ஜெஸ்டெய்னா. இவருக்கு வயது 30. அனுமதி இல்லாமல் கார் ஓட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. தன் மீதான தண்டனையை எதிர்த்து ஷைமா அப்பீல் செய்துள்ளதாக அவர் சார்பில் சமர் பதாவி என்பவர் கூறியுள்ளார்.
உலகிலேயே சவூதியில் மட்டுமே பெண்கள் கார் ஓட்டத் தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சவூதி பெண்கள் மட்டுமல்ல பிற நாட்டுப் பெண்களும் கூட இங்கு கார் ஓட்ட அனுமதி கிடையாது. இதனால் தங்களது தேவைகளுக்காக வெளி டிரைவர்களை நாடும் நிலையில் சவூதி பெண்கள் உள்ளனர். ஆனால் டிரைவர்களுக்கான குறைந்த பட்ச மாதச் சம்பளம் 400 டாலர் என்பதால் டிரைவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளவும் அவர்கள் தயங்குகின்றனர். இதனால் தங்களது உறவினர்களையே கார் ஓட்டச் சொல்லி கேட்டுக் கொள்ளும் பெண்கள் அங்கு அதிகம்.
குழந்தைகளை அழைத்து வர பள்ளி செல்ல, கடைகளுக்குப் போய் வர, டாக்டரிடம் போக என எதற்குமே அவர்களால் கார் ஓட்டிச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரசின் இந்த கடுமையான கெடுபிடிகள் குறித்து சோஹிலா மேலும் குமுறலுடன் கூறுகையில், நபிகள் நாயகத்தின் மனைவியர் கூட ஒட்டகம், குதிரைகள் ஆகியவற்றை ஓட்டியதாக குரான் கூறுகிறது. போக்குவரத்துக்கு அப்போது இருந்தவை அவை மட்டுமே. இந்தக் காலத்தில் வாகனங்கள் வந்து விட்ட நிலையில் அதை ஓட்டக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று கேட்கிறார்.
கார் ஓட்டியதற்காக கசையடி தண்டனை தரப்பட்டுள்ளது உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Sunday, September 25, 2011
குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்
அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?
Tuesday, September 20, 2011
பலாத்காரம் செய்யவில்லை... எச்சரித்தேன்!!!
நடிகை சோனாவும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டார். அவர் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடக் கூடியவர். சினிமாவில் வெற்றி பெற முடியாத நிலையில், படங்களைத் தயாரித்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்சினையில் சிக்கினார்.
சினிமாவில் என்னுடைய வெற்றி மற்றும் எனது குடும்ப பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் சோனா உள்நோக்கத்துடன் நடந்துகொண்டார். கவர்ச்சியால் மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளதாக தெரிகிறது.
அந்த எண்ணத்தோடு குடிபோதையில் என்னிடம் வந்து பேசினார். நல்ல போதையில் அவர் இருந்தார். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, என்னிடம் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்துகொண்டார். எனவே நான் சோனாவை கடுமையாக எச்சரித்தேன்.
அவரை அனைவரது முன்பாகவும் நான் எச்சரிக்கை செய்ததால், அவருக்கு அவமானமாக போய்விட்டது. அதைத்தொடர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். மறுநாள் போலீசில் என்மீது பொய்யான பாலியல் புகாரை கொடுத்துள்ளார்.
Monday, September 12, 2011
தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டம் 15ஆம் தேதி துவக்கம்
Saturday, August 27, 2011
2-வது கணவரை பிரிந்தார் நடிகை வனிதா – ஆகாஷுடன் சேர்ந்து வாழ விருப்பம்
இரண்டாவது கணவரை பிரிந்து விட்டேன். முதல் கணவர் நடிகர் ஆகாஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று நடிகை வனிதா அறிவித்துள்ளார்.
முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா. ஆகாஷுடன் வளரும் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா போராடினார். போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான்.
இதையடுத்து, மகனுக்காக இரண்டாவது கணவர் ராஜனை விட்டு விலகி விட்டதாக நடிகை வனிதா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
என் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கருதிதான் இரண்டாம் திருமணம் செய்தேன். ஆனால் என் மகன் ஸ்ரீஹரி, அப்பா ஆகாஷ் இன்னும் தனியாக தானே இருக்கிறார். நீ எப்படி இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கண்டித்தான். அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
அவசரப்பட்டு தவறு செய்து விட்டதை உணர்ந்தேன். அவன் அம்மாவை இன்னொருத்தருடன் பார்க்க விரும்பவில்லை என்று புரிந்தது. மகன் எனக்கு முக்கியம். அவனுக்கு விருப்பம் இல்லாத எதையும் இனி செய்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.
ராஜனுக்கும் சமீபத்திய பிரச்சினைகள் மன உளைச்சலை ஏற்படுத்தின. இருவரும் உட்கார்ந்து பேசி பிரிவது என முடிவு எடுத்து விலகி விட்டோம். இப்போது என் மகன் ஸ்ரீஹரி என்னுடன் நன்றாக பேசுகிறான். நானும் ஆகாஷு ம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் பல தடவை சண்டைகள் வந்துள்ளன. அவரை அவமானப்படுத்தி பேசி இருக்கிறேன். ஆனாலும் இன்று வரை அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டு உள்ளது. நாங்கள் சேர்ந்து வாழ ஆசை இருந்தாலும் நடக்குமா? என்று தெரியவில்லை.
எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். என்னுடன் பேச வேண்டும். அதுதான் முக்கியம். ஆகாஷ் மேல் நான் வைத்திருந்த காதல் உண்மையானது. அதனால் அவருடன் மீண்டும் என்னால் பேச முடிகிறது. அவரும் என்னுடன் நன்றாக பேசுகிறார். என் அப்பா விஜயகுமார் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். அவருடன் பேச ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அவரை நேரில் சந்திக்க விடாமல் சிலர் தடுக்கின்றனர். அண்ணனும் சகோதரிகளும் மீண்டும் நான் குடும்பத்தோடு சேரக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
‘ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க!’ – நம்ம தலையோட புண்ணியத்தில ஒண்ணு கூடிட்டாய்ங்க!!
சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என பிரிந்து நின்று திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மூன்று நிறுவனங்களும், பிரச்சினை என்று வந்ததும் ஒன்றுக்கொன்று கரம் கோர்த்து நிற்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்துதான் அஜீத்தின் மங்காத்தாவை வெளியிடுகிறார்கள் என்பது இன்றைய ஸ்பெஷல் செய்தி.
மங்காத்தா திரையரங்குகளைத் தொடுவதே சிரமம் என்று கடந்த சில தினங்கள் முன்பு வரை செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில்தான் ஞானவேல் ராஜா உள்ளே வந்தார். அவர் படத்தின் தயாரிப்பாளரான க்ளவுட் நைன் பெயரையே அவர் சுத்தமாக மறைத்துவிட, போங்கப்பா நீங்களும் உங்க டீலும் என கடுப்பானார் தயாநிதி அழகிரி.
இந்த நேரத்தில் அவரது க்ளவுட் நைன் பேனரையும் சன் பிக்சர்ஸையும் இணைத்து வைத்தவர் கருணாநிதியின் மற்றொரு வாரிசான உதயநிதி ஸ்டாலின்.
தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் உதவியுடன் சன் பிக்சர்ஸ் வழங்கும் அஜீத்தின் மங்காத்தா என இப்போது நிலைமை மாறியிருக்கிறது. விளம்பரங்களில் ‘க்ளவுட் நைன் – சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தயாநிதி அழகிரி, “அண்ணன் உதயநிதிக்கு நன்றி. அவர்தான் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்தார்” என்று கூறியுள்ளார். பொதுவாக ஒரு படத்துக்கு 25 நாட்களுக்கு மேல் விளம்பரம் செய்து வெளியிடுவது சன் பிக்சர்ஸ் பாணி. ஆனால் தயாநிதிக்காக இந்தப் படத்தை ஒரு வாரத்துக்குள் விளம்பரம் செய்து வெளியிடுகிறார்கள்.
படம் வரும் 31-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என உறுதியளித்துள்ளார் தயாநிதி அழகிரி.
Thursday, August 25, 2011
சிங்கப்பூர்ல பாட்டு, தீபாவளிக்கு ட்ரீட்டு!
தயாநிதி ஸ்டாலின் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் '7ஆம் அறிவு' படம் எப்போது வெளிவரும் என்ற கேள்விக்கு, இன்று பதில் கிடைத்திருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாக, இதன் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்திருக்கிறார். இப்படம் எப்போது வெளிவரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. அதற்கு காரணங்களும் இருக்கின்றன; டி.என்.ஏக்களின் ரகசியத்தை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். நம் மூதாதையர்கள் எவ்வளவு சர்வ வல்லமை பொருந்தியவர்கள், நமது வரலாறு என்ன, நம் திறமைகள் என்னென்ன என்பதை அறியவியல் பூர்வமாக காட்டியிருக்கிறாராம். சூர்யா இப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கிறார். ஒருவர் புத்த துறவியாகவும், ஒருவர் சர்க்கஸ் கலைஞராகவும் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இப்படத்தின் கதாநாயகியாக (விஞ்ஞானியாக) நடித்துள்ளார். 'கஜினி' படத்தில் சூர்யா-ஏ.ஆர்.முருகதாஸ்-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி அபார வெற்றியைப் பெற்றது. இரண்டாவது முறையாக இக்கூட்டணி இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் புனைகதையாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்படத்தில், வில்லன் வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறார். ஹாலிவுட்டிற்கு இணையாக படத்தை உருவாக்கி வருவது, குங்பூ சண்டைக் காட்சியை கிளைமாக்ஸில் இணைத்திருப்பது, இவை எல்லாம் தமிழ் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விலை சுமார் ஏழு கோடியாம். அதுமட்டுமல்ல, இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் நேரடியாக ஒளிபரப்பப் போகிறதாம் சன். இப்படத்தை பெரிய விலை கொடுத்து வாங்க அத்தனை சேனல்களுக்கும் அடிதடி போட்டி. ஆனால் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படங்கள் எல்லாமே கலைஞர் டிவி அல்லது விஜய் டிவி தவிர வேறெந்த சேனல்களுக்கும் கொடுப்பதில்லை அவர். இந்த நிலையில்தான் சன் குழும தலைவர் கலாநிதி மாறனும் உதயநிதியும் சந்தித்திருக்கிறார்கள். முழு படத்தையும் வாங்கி வெளியிட சன் தயாராக இருந்தும், தற்போதைக்கு சேனல் ரைட்ஸ் வரைக்கும்தான் கொடுத்திருக்கிறாராம் உதயநிதி. செப்டம்பர் 10ந் தேதி சிங்கப்பூரில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறதாம். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 26-ம் தேதி, அதாவது வரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வருகிறது என்று இப்படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் அவரது டுவிட்டர் இணைய பக்கத்தில் உறுதிபடக் குறிப்பிட்டுள்ளார். ஓ.கே. ஓ.கே. ட்ரீட்டுக்கு எல்லாரும் ரெடி..........
Tuesday, August 23, 2011
பிரகாஷ்ராஜ் இயக்கும் 'தோனி'!
Monday, August 22, 2011
விஜயகாந்த் கூட்டணியை யாராலும் பிரிக்கவே முடியாது...
போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அரசு...
ஒரே வாரத்தில் 400 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அரசு...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து காவல் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஏராளமான போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர், செய்யப்பட்டு வருகின்றனர்.
ஓரிரு உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படும் நிலை மாறி தற்போது பலர் கூண்டோடு மாற்றம் செய்யப்படுகின்றனர்.
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 250 டி.எஸ்.பி.க்கள், 400 சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.பி., சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.
Saturday, August 20, 2011
தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி
Tuesday, August 16, 2011
இன்று முதல் சமச்சீர் பாட வகுப்புகள் தொடக்கம்:
Monday, August 15, 2011
‘அப்பளத்துக்கே வழியில்லையாம், அண்டாச் சோறு கேக்குதாம்’! – என்ன கொடும சார் இது!
என்னுடன் இமயமலைக்கு எந்த ஒரு நடிகையும் வரவில்லை: விஷால்!!!